யாழ்ப்பாணம் - மண்டைதீவைச் சேர்ந்த தம்பதிகள் மரணத்திலும் ஒன்றிணைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கனடா Brampton இல் வசித்து வந்தவர்களான சிவசம்பு குமாரலிங்கம் மற்றும் அவரது துணைவியார் குமாரலிங்கம் மஞ்சுளாதேவி என்ற தம்பதியே உயிரிழந்துள்ளனர்.
கடந்த மாதம் 22ஆம் திகதி கணவன் உயிரிழந்த நிலையில் அவரது இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 06 ஆம் திகதி இடம்பெறவிருந்தது.
இந் நிலையிலேயே அவரது மனைவி 12 நாட்களின் பின் நேற்று நேற்று உயிரிழந்துள்ளார்.
குறித்த இருவரின் இறுதிக் கிரியைகளும் ஒரே நாளில் இடம்பெறவுள்ளதாக அவர்களது உறவினர்கள் அறிவித்துள்ளனர்