வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஐ.நா அலுவலகத்தின் முன்பு பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச விசாரணையை கோரி இன்று காலை முதல் கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்
இறுதி யுத்தத்தின் போது, இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டமை குறிப்பிடத்தக்கது.