புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2023

கொலை குழு ஒன்றை உருவாக்கிய கோட்டாபய : சனல்4 காணொளியில் அம்பலமான இரகசியங்கள்

www.pungudutivuswiss.com
திரிபோலி என்ற கொலை குழுவை உருவாக்குமாறு கோட்டாபய ராஜபக்ச 
எங்களிடம் கேட்டுக் கொண்டார் என ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொர்பில் சனல்4 வெளியிட்ட காணொளியில் ஆசாத் மௌலானா இது குறித்து விபரித்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் பல இரகசியங்கள்: சனல் - 4 வெளியிட்ட அதிர்ச்சி காணொளி (Video)
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் பல இரகசியங்கள்: சனல் - 4 வெளியிட்ட அதிர்ச்சி காணொளி (Video)
கோட்டாபய விடுத்த கோரிக்கை
மேலும் தெரிவிக்கையில்,

நானும் அந்த சமயம் என்னுடைய தலைவராக இருந்த பிள்ளையானும் கோட்டாபயவை சந்தித்தவேளை எங்களிடம் அவர் திரிபோலி என்ற கொலைகுழுவை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டார்.

கொலை குழு ஒன்றை உருவாக்கிய கோட்டாபய : சனல்4 காணொளியில் அம்பலமான இரகசியங்கள் | Channel4 Telecast Shocking Video Gotabaya

திறமைசாலிகளை தெரிவு செய்து இணைந்து செயற்படுங்கள் என கோட்டாபய எங்களிடம் தெரிவித்தார்.

இதன் காரணமாக பிள்ளையான தன்னுடைய நபர்களைக் கொண்டு திரிபோலி என்ற கொலைக் குழுவை உருவாக்கினார்.


அதன் பின்னர் கோட்டாபய ராஜபக்சவின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் திரிபோலி கொலைகுழு செயற்பட்டது என குறிப்பிட்டுள்
ளார்.

ad

ad