புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2023

ஊர்காவற்றுறை பிரதேச சபைச் செயலாளரை கைது செய்க: மறவன்புலவு சச்சிதானந்தம்

www.pungudutivuswiss.com
ஊர்காவற்றுறை பிரதேச சபைச் செயலாளரைக் கைது செய்யுமாறு நூற்றுக்குக்கும்
மேற்பட்ட பிரதேச சபை வாக்காளர் கையெழுத்திட்டு ஊர்காவற்துறைக் பொலிஸ்
நிலையத்தில் முறையிட்டுள்ளனர் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.
ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள வீதி ஒன்றுக்கு செபத்தியான் கண்ணகி தெரு என பெயரிட்டமை குறித்து இன்றையதினம் (06.09.2023) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நல்லூர் ஆலய சூழலில் தென்னிலங்கை நபரின் அடாவடிச் செயல் - செய்திகளின் தொகுப்பு
நல்லூர் ஆலய சூழலில் தென்னிலங்கை நபரின் அடாவடிச் செயல் - செய்திகளின் தொகுப்பு
கண்ணகிக்குக் களங்கம்
தமிழிலும் சிங்களத்திலும் கொடுத்த முறையீட்டில், தமிழருக்கும் புனிதமானவள், சிங்களவருக்கும் புனிதமானவள், கண்ணகி என்ற பத்தினி. பிரான்சில் பிறந்த செபத்தியானுக்கும் கண்ணகிக்கும் என்ன தொடர்பு?
ஊர்காவற்றுறை பிரதேச சபைச் செயலாளரை கைது செய்க: மறவன்புலவு சச்சிதானந்தம் | Maravanpulau Sachithanandan Request Arrest Ds
கண்ணகிக்குக் களங்கம் தருகின்ற செபத்தியான் கண்ணகி தெரு என்ற பெயர்ப்பலகையை உடனே அகற்றுக.
இன மத முரண்களை மோதல்களை உருவாக்கிய பிரதேச சபைச் செயலாளரைக் கைது செய்க எனச் சட்டங்களை மேற்கோள்காட்டி வாக்காளர் முறையிட்டுள்ளனர்.
தாம் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் பிரதேச சபைச் செயலாளர் நேற்றைய (5.9.2023) விசாரணைக்குக் பொலிஸ் நிலையம் வரவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad