புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 செப்., 2023

தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட நிர்வாக குழு தெரிவு!

www.pungudutivuswiss.com


இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிருவாகத் தெரிவு நேற்று கட்சியின் நிர்வாக செயலாளர்   சூசைப்பிள்ளை சேவியர் குலநாயகம் தலைமையில், கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிருவாகத் தெரிவு நேற்று கட்சியின் நிர்வாக செயலாளர் சூசைப்பிள்ளை சேவியர் குலநாயகம் தலைமையில், கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேச கிளை களினதும் நிருவாகிகளின் பிரசன்னத்தோடு நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, மன்னார் மாவட்ட கிளையின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், செயலாளராக சூசையப்பு துரம், பொருளாளராக முன்னாள் நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் பரஞ்சோதி , துணைத்தலைவராக ஜெயக்குமார் ,துணைச் செயலாளராக திருமதி.செல்வராணி சோசை ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை மாவட்ட கிளையின் செயற்குழு உறுப்பினர்களாக 10 பெரும் தெரிவு செய்யப்பட்டனர்.

ad

ad