புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 செப்., 2023

புவி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம்...!

www.pungudutivuswiss.com
சூரியனை ஆய்வு செய்ய பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா
 எல்-1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பெங்களூரு, 
Live Updates 2 செப்டம்பர் 2023 10:04 AM சூரியனை ஆய்வு செய்ய அனுப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்டில் இருந்து பிரிந்தது. தற்போது ஆதித்யா எல்-1 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. புவி சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள விண்கலம் சூரியனை ஆய்வு செய்வதற்கான பயணத்தை தொடங்கியுள்ளது AM ராக்கெட்டில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் பிரிந்து செல்லும் 3-வது நிலை நிறைவு: இஸ்ரோ தகவல் இந்த நிலையில், பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் இருந்து பிரிந்து செல்லும் 3-வது நிலை நிறைவடைந்து உள்ளது என இஸ்ரோ தெரிவித்து உள்ளது. 2 செப்டம்பர் 2023 8:22 AM சூரியனை ஆய்வு செய்ய வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஆதித்யா எல்-1 விண்கலம்...! சூரியனை ஆய்வு செய்ய பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது 2 செப்டம்பர் 2023 8:09 AM ஆதித்யா எல்-1 விண்கலம் செலுத்தப்படுவதை நேரில் பார்ப்பதற்காக சதீஷ் தவான் விண்வெளி மைய வளாகத்தில் திரண்டிருந்த மக்கள். 2 செப்டம்பர் 2023 7:53 AM டெல்லி ஜவஹர்லால் நேரு கோளரங்க திட்ட மேலாளர் பிரேரண சந்திரா கூறுகையில், “சூரியன் தொடர்பாக ஏற்கனவே மற்ற நாடுகளின் விண்வெளி ஆய்வு மையங்கள் ஆய்வு செய்துள்ளன. இந்தியாவில் சூரிய கண்காணிப்பகம் இல்லை. ஆதித்யா எல்1 விண்கலத்துடன் சூரியனைப் பற்றிய கண்காணிப்பில் இந்தியாவும் இருக்கும். விண்வெளி வானிலை மற்றும் வரவிருக்கும் விண்வெளி பயணங்களை புரிந்துகொள்ள இந்த ஆய்வு உதவும்’ என்றார். 2 செப்டம்பர் 2023 7:48 AM எல்-1 முனை பகுதியில் 24 மணிநேர தொடர் கண்காணிப்பு சாத்தியம்: மாதவன் நாயர் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, இந்த திட்டம் மிக முக்கியம் வாய்ந்தது. ஆதித்யா எல்-1 விண்கலம் ஆனது லெக்ராஞ்சியன் முனை 1 பகுதியில் நிறுத்தப்படும். இந்த முனை பகுதியில் பூமி மற்றும் சூரியனின் ஈர்ப்பு விசை ரத்து செய்யப்படுகிறது. இதனால், குறைந்த எரிபொருளை கொண்டு, நாம் விண்கல பராமரிப்பு பணியை மேற்கொள்ளலாம். இதுதவிர, 24 மணிநேரமும் தொடர்ந்து கண்காணிப்பதும் சாத்தியப்படும். அந்த விண்கலத்தில் 7 உபகரணங்கள் வைக்கப்பட்டு உள்ளன. வளிமண்டலம், பருவநிலை மாற்றம் பற்றிய படிப்புகள் உள்ளிட்டவற்றில் ஏற்படும் பல்வேறு காரண காரியங்களை விவரிப்பதற்கு, இந்த திட்டத்தில் இருந்து கிடைக்க கூடிய தரவுகள் உதவும் என கூறியுள்ளார். 2 செப்டம்பர் 2023 7:43 AM ஆதித்யா எல்-1 விண்கலம் செலுத்தப்படுவதை நேரில் பார்ப்

ad

ad