புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2024

இலங்கை - இந்திய இராஜதந்திர உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும்

www.pungudutivuswiss.com


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆங்கில பத்திரிகையொன்று அடிப்படையற்ற காரணிகளை சுட்டிக்காட்டி கட்டுரையொன்றை பிரசுரித்துள்ளது. குறித்த கட்டுரை இலங்கை - இந்தியாவுக்கிடையிலான இராஜதந்திர உறவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா விசனம் வெளியிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆங்கில பத்திரிகையொன்று அடிப்படையற்ற காரணிகளை சுட்டிக்காட்டி கட்டுரையொன்றை பிரசுரித்துள்ளது. குறித்த கட்டுரை இலங்கை - இந்தியாவுக்கிடையிலான இராஜதந்திர உறவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா விசனம் வெளியிட்டார்

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அது தொடர்பில் பிரபல ஆங்கில பத்திரிகையொன்றின் அரசியல் கட்டுரையில், மைத்திரி இந்தியாவிலுள்ள பிரபல இராஜதந்திரயொருவர் தொடர்பிலேயே தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களது வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் போனமையே இதற்கான காரணமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறெனில் இதுவரை இந்த தாக்குதல்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களுக்கு என்னவானது? இதன் மூலம் யாருக்கு வெள்ளையடிப்பதற்கு முயற்சிக்கப்படுகிறது? புதிதாக வெளிவரும் இந்த அரசியல் சூழ்ச்சி என்ன?

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இவ்வாறானதொரு செய்தி வெளியிடப்பட்டுள்ளமையை, இரு நாடுகளுக்கிடையில் முரண்பாடுகளை தோற்விக்கும் செயலாகவே நாம் பார்க்கின்றோம். இதுவரைக் காலமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, 100 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான செய்தி வெளியாகியுள்ளது.

எவ்வாறிருப்பினும் இன்னும் சில மாதங்களில் உருவாகவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பாதிக்கப்பட்டோருக்கு நிச்சயம் நீதி வழங்கப்படும் என்றார்.

ad

ad