புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2024

முருகன், ரொபேர்ட் பயஸ், ஜெயக்குமார் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேறினர்!

www.pungudutivuswiss.com

கொழும்பு திரும்பிய முருகன், ரொபேர்ட் பயஸ்,  ஜெயக்குமார் ஆகிய மூவரையும் கொழும்பு விமான நிலையத்தில் பலமணி நேரம் விசாரணை செய்த அதிகாரிகள் சற்று முன்னர் அவர்களை விடுதலை செய்தனர்.

கொழும்பு திரும்பிய முருகன், ரொபேர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய மூவரையும் கொழும்பு விமான நிலையத்தில் பலமணி நேரம் விசாரணை செய்த அதிகாரிகள் சற்று முன்னர் அவர்களை விடுதலை செய்தனர்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 33 ஆண்டுகள் வரை சிறையிலிருந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன் ரொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இன்று காலை இலங்கையை வந்தடைந்தனர்.

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னைக்கு காவல்துறை வாகனம் மூலம் அழைத்து வரப்பட்டனர். இன்று முற்பகல் 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து அவர்கள் இலங்கை நோக்கி பயணித்தனர்.

சட்டத்தரணி புகழேந்தி பாண்டியனும் அதே விமானத்தில் கொழும்புக்குப் பயணித்தார். சென்னை விமான நிலையத்தில் நளினி உள்ளிட்டவர்கள் இவர்களை வழியனுப்பி வைத்தனர்.

மூவரும் காலை 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.இதையடுத்து அவர்களிடம் குடிவரவு அதிகாரிகளும், பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் நீண்ட நேரம் விசாரணை செய்த பின்னர் மாலையிலேயே விடுவித்தனர்.

இவர்களுக்கு இலங்கைக்கு செல்வதற்கு மாத்திரமே இந்தியாவிலுள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாகவும் சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்தார்.


ad

ad