புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2024

மீண்டெழுகிறது பொருளாதாரம் - வறுமைநிலையில் மாற்றம் இல்லை!

www.pungudutivuswiss.com


இலங்கையின் பொருளாதாரம் மீண்டெழும் பாதையில் பயணித்தாலும் ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழும் மக்களின் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுத்திய தாக்கத்தினை தணிப்பதற்கான உறுதியான முயற்சிகள் முக்கியமானவை இதனுடன் காத்திரமான நம்பகமான கட்டமைப்புசார் நடவடிக்கைகளுக்கான வழிமுறைகளும் முன்னெடுக்கப்பட வேண்டுமென மாலைதீவு, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளுக்கான உலக வங்கியின் பணிப்பாளர் பாரிஸ் ஹடாட்ட ரெஸோஸ் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரம் மீண்டெழும் பாதையில் பயணித்தாலும் ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழும் மக்களின் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுத்திய தாக்கத்தினை தணிப்பதற்கான உறுதியான முயற்சிகள் முக்கியமானவை இதனுடன் காத்திரமான நம்பகமான கட்டமைப்புசார் நடவடிக்கைகளுக்கான வழிமுறைகளும் முன்னெடுக்கப்பட வேண்டுமென மாலைதீவு, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளுக்கான உலக வங்கியின் பணிப்பாளர் பாரிஸ் ஹடாட்ட ரெஸோஸ் தெரிவித்தார்

உலக வங்கியினால் இலங்கை அபிவிருத்தி இற்றைப்படுத்தல் மீண்டெழுதலுக்கான பாலம் என்ற தலைப்பின் கீழ் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை உலக வங்கியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இங்கு உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் பிரான்சிஸ்கா ஓன்சார்ஜ் கூறுகையில்,

இலங்கையில் பணவீக்கம் குறைந்து வருவதாகவும் புதிய அரசிறைகொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்புலத்தில் அதிக வருமானங்கள் காணப்படுவதாகவும் சுமார் 5 தசாப்த காலப்பகுதியில் முதன்முதலாக நடைமுறைக் கணக்கில் மிகை ஏற்பட்டுள்ளதாகவும் பண அனுப்புதல்கள் அதிகரித்துள்ளதாகவும் சுற்றுலாத்துறை மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 2.2 வீதமான வளர்ச்சியை காணும் என எதிர்வு கூறப்பட்டது. உறுதியாக நிகழ்வதற்கான அறிகுறிகளைக் காட்டியது. 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர் இது ஏற்பட்டது. இருப்பினும், உயர்வான வறுமை மட்டங்கள், வருமான சமத்துவமின்மை, தொழில் சந்தை அக்கறைகள், ஆகிய பிரச்சினைகளை நாடு முகங்கொடுத்து வருவதாக உலக வங்கியின் அண்மைய அரையாண்டு அறிக்கை இற்றைப்படுத்தல் தெரிவிக்கின்றது.

இருப்பினும் தொடர்ந்து நான்கு வருடங்களாக வறுமை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் 25.9 வீதமான இலங்கையர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தொழிற்படை பங்குபற்றுதலிலும் வீழ்ச்சி காணப்பட்டது. குறிப்பாக பெண்கள் மற்றும் நகர் பிரதேசங்களில் இது காணப்பட்டது.

நுண், சிறிய, மத்திய அளவிலான நிறுவனங்கள் மூடப்பட்டதனால் இந்த பிரச்சினை அதிகமானது. அதிக விலையேற்றம், வருமான இழப்புக்கள், போதிய வேலை வாய்ப்பின்மை ஆகியவற்றின் காரணமாக உணவுத் தேவைப்பாடுகள் மற்றும் சுகாதாரம், கல்வி சார்ந்த செலவுகளை சமாளிப்பதற்காக கடனை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை குடும்பங்களுக்கு ஏற்பட்டது.

பண வீக்கத்தின் படிப்படியான அதிகரிப்புக்கள் மற்றும் சிறிய நடைமுறைக் கணக்கு மிகைகள் ஆகியவற்றினால் 2025 ஆம் ஆண்டில் 2.5 வீத மத்திம வளர்ச்சியை அறிக்கை எதிர்வு கூறுகின்றது.

எவ்வாறாயினும் அதிக கடன்சேவை கடப்பாடுகள் அரசிறை மிகுதிகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2026 வரை வறுமை விகிதங்கள் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்கால வாய்ப்புகள் மறுசீரமைப்புக்களை மாற்றுதல், நிதித் துறை பாதிப்புறும் தன்மைகள், நெருக்கடியினால் ஏற்பட்ட தாக்கத்தை தாங்கிக்கொள்ளல் ஆகியன காணப்படும் தொடர்ச்சியான பேரண்ட அரசிறை நிதி ஸ்திரத்தன்மை, பாரியளவிலான தனியார் துறை முதலீடுகள், அரசிற்கு சொந்தமான நிறுவனங்களுடன் தொடர்புடைய இடர்கள் தொடர்பில் செயற்படல் ஆகியவற்றின் மூலம் மீண்டெழும் பொருளாதாரத்தை பேணுவதற்கு உறுதியான மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தல்கள் அடிப்படையானது என அறிக்கை வலியுறுத்துகின்றது.

இலங்கை அபிவிருத்தி இற்றைப்படுத்தலானது தென் ஆசிய அபிவிருத்தி இற்றைப்படுத்தலின் தோழமை ஆவணமாகும். இது உலக வங்கியின் அரையாண்டு அறிக்கையாகும். இவ்வறிக்கை தென் ஆசிய பிராந்தியத்தின் பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் எதிர்கால வாய்ப்புக்கள் ஆகியவற்றை ஆராய்கின்றது.

அத்தோடு நாடுகள் எதிர்கொள்கின்ற கொள்கை ரீதியான சவால்களையும் பகுப்பாய்வு செய்து வருகின்றது. 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் பதிப்பில் மீண்டெழலுக்கான தொழில்கள் என்பதில் உலகில் துரிதமாக வளர்ந்து வரும் பிராந்தியங்களில் தென் ஆசியா காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் 6.0 வீத வளர்ச்சி எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்பட்ட காத்திரமான வளர்ச்சி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் அறவீடுகள் பிரதான காரணியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த உறுதியான எதிர்கால வாய்ப்புக்கள் ஏமாற்றக்கூடியவைகள் என அறிக்கை கூறுகின்றது. பெரும்பாலான நாடுகளில் வளர்ச்சியானது தொடர்ந்தும் பெருந்தொற்றுக்கு முன்னரான நிலையில் காணப்படுகின்றது. அரச செலவுகளிலேயே தங்கியுள்ளன.

அதேவேளை தென்னாசிய நாடுகளில் தனியார் முதலீட்டு வளர்ச்சிகள் வீழ்ச்சி கண்டுள்ளன. மற்றும் துரிதமாக அதிகரித்துவரும் வேலைசெய்யக்கூடிய வயதுடைய மக்களுக்கு ஏற்ற விதத்தில் தொழில்கள் இப்பிராந்தியங்களில் உருவாக்கப்படவில்லை.

உறுதியான வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்களை அதிகரித்தல், வளர்ச்சியை அதிகரித்தல், உற்பத்தியை மேம்படுத்தல், காலநிலைக்கு சாதகமான விதத்தில் அரச முதலீடுகளுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு வகையான கோரிக்கைகளை அறிக்கை விதந்துரைக்கின்றது.

ad

ad