புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2025

கட்டார் அல் உதெய்த் தாக்குதல்.. ஈரானுக்கு நன்றி கூறிய ட்ரம்ப்!

www.pungudutivuswiss.com
ஈரானின் கட்டார் மீதான தாக்குதலில் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை
என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கு பின்னரான அவரின் இரண்டாவது பதிவில், "பிராந்தியத்திற்கு அமைதியை ஏற்படுத்துவதற்காக கட்டார் நாட்டின் மிகவும் மதிக்கப்படும் எமிர் செய்த அனைத்திற்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

கட்டாரில் உள்ள அமெரிக்க தளத்தில் இன்று நடந்த தாக்குதலில், எந்த அமெரிக்கர்களும் கொல்லப்படவில்லை அல்லது காயமடையவில்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக முக்கியமாக, எந்த கட்டார் நாட்டவரும் கொல்லப்படவில்லை அல்லது காயமடையவில்லை” என தெரிவித்துள்ளார்.



முதலாம் இணைப்பு

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் அல் உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் குறித்து ஈரான் முன்கூட்டியே அறிவித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அல் உதெய்த் தாக்குதல்.. ஈரானுக்கு நன்றி கூறிய ட்ரம்ப்! | Al Udeid Iran Attack On Qatar Trump Respond

ஈரான், கட்டார் மீது மேற்கொண்ட தாக்குதலையடுத்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.


குறித்த பதவில், ”ஈரான் அணுசக்தி நிலையங்களை அழித்ததற்கு அதிகாரப்பூர்வமாக மிகவும் பலவீனமான பதிலடியைக் கொடுத்துள்ளது, நாங்கள் எதிர்பார்த்தது இதுதான், மேலும் மிகவும் திறம்பட எதிர்கொண்டது.

நன்றி தெரிவிப்பு..

14 ஏவுகணைகள் ஏவப்பட்டன - 13 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன, மேலும் 1 விடுவிக்கப்பட்டது, ஏனெனில் அது அச்சுறுத்தல் இல்லாத திசையில் சென்றது. எந்த அமெரிக்கர்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை, எந்த சேதமும் ஏற்படவில்லை என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ad

ad