-

22 மே, 2026

சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜூக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்திய ரவிகரன்! [Thursday 2026-05-21 16:00]

www.pungudutivuswiss.com



விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதியும் சமர்க்கள நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜூக்கு  பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பாராளுமன்றில் இன்று  உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் பிரிகேடியர் பால்ராஜ்க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதியும் சமர்க்கள நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜூக்கு பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தியுள்ளார். பாராளுமன்றில் இன்று உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் பிரிகேடியர் பால்ராஜ்க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எமது ஈழ விடுதலைப்போராட்டத்தின் சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் எமை விட்டுப் பிரிந்து 18ஆண்டுகள் கடந்திருக்கின்றன.

கந்தையா பாலசேகரம் என்ற இயற்பெயரையுடைய சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியைச்சேர்ந்தவர்.

உலகப் போரியல் வல்லுநர்களே கண்டு வியந்த சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு இந்த உயரிய சபையிலே சிரம் தாழ்த்தி எனது அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

ad

ad