புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2013

பிள்ளைகளை இழந்த தாய்மார்களை கொச்சைபடுத்தி, முரளிதரன் பேசியுள்ளதை ஏற்கமுடியாது! மனோ கணேசன்
முத்தையா முரளிதரன் தனது அரசாங்கத்தை வானளாவ புகழ்ந்து பேசலாம். ஆனால் பெற்ற பிள்ளைகளை இழந்து தவிக்கும் தாய்மார்களை கொச்சைபடுத்தி, முரளிதரன் பேசியுள்ளதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. என என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்
முரளிதரன் கருத்துக்களில் பிழையில்லை!– டேவிட் கமரூன்
கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரனின் கருத்துக்களில் பிழையில்லை என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.
நிந்தவூரின் குழப்பகரமான சூழ்நிலை தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் அவசர பிரேரணை
நிந்தவூர் பிரதேசத்தில் தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல், அவசர பிரேரணை ஒன்றை சபையில் சமர்ப்பித்துள்ளார்.
கமரொனின் காலக்கெடுவுக்குள் எதையும் செய்ய முடியாது – சிறிலங்கா அதிபர் ஆவேசம்

பிரித்தானியா கோருவது போன்று எந்தவொரு காலக்கெடுவுக்குள்ளேயும் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த முடியாது என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 
மனிதஉரிமை விவகாரம்: சிறிலங்காவுக்கு சீனா கொடுத்துள்ள அதிர்ச்சி வைத்தியம்/சீனாவும் அசைகிறதா 

மனிதஉரிமைகளை பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று சிறிலங்காவிடம் சீனா கோரிக்கை விடுத்துள்ளது. 
இசைப்பிரியா படுகொலை: அனைத்துலக விசாரணை கோரும் ரொறன்ரோ குடும்பம் – கனேடிய ஊடகம்

சிறிலங்காப் படையினரால் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டது தொடர்பான காணொலி வெளியான பின்னர், ரொறன்ரோவில் உள்ள அவரது உறவினர்களின் குடும்பம், அனைத்துலக போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளதாக, கனடாவில் இருந்து வெளியாகும் நசனல் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. 
இலங்கை விஜயம் தொடர்பில் பிரி. பாராளுமன்றில் உரையாற்றிய பிரி. பிரதமர் டேவிட் கமரூன்
இலங்கையில் நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை சென்ற பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்திற்குச் சென்று தமிழ் மக்களையும் சந்தித்தமை யாவரும் அறிந்ததே. இந்நிலையில்  இலங்கை தொடர்பாக இன்று அவர் பிரித்தானிய பாராளுமன்றில் உரையாற்றியுள்ளார்.
மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி மட்டக்களப்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள தமது காணிகளில் குடியேற சிலர் தடை விதிப்பதாகவும் தமது காணியில் குடியேற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்து மண்முனைப்பற்றில் உள்ள சில முஸ்லிம் மக்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை தமிழர்களை இந்தியாவிடமிருந்து கெமரோன் களவாடிவிட்டார்: தெ ஏசியன் ஏஜ்
இந்தியா இதுவரை இலங்கை விடயத்தில் வகித்து வந்த பங்காற்றலை, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் களவாடிவிட்டதாக இந்திய இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.தெ ஏசியன் ஏஜ் என்ற இணையத்தளம் இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.
இசைப்பிரியாவின் கொலையில் தவிற்கமுடியாதது நியாயப்படுத்துகிறார் கருணா கருணாவின் மனைவி நிரோ என்ற வித்தியாவதி கணவன் பற்றி கூறியவை
தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் என்றழைக்கப்படும்கருணா தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாக அவரது மனைவிவித்தியாவதி தெரிவித்துள்ளார்.கருணாவின் மனைவியும் மூன்றுகுழந்தைகளும் சில வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் வசித்து வந்தனர்,தற்போது

18 நவ., 2013

நாமக்கல் தொழிற்சாலையில் இருந்து  59 சத்தீஸ்கர் மாநிலபெண் கொத்தடிமைகள் மீட்பு
நாமக்கல் அருகே உணவுப்பொருட்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையில் கொத்தடிமை களாக பணியமர்த்தப்பட்டிருந்த சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த
தனிநபர் புகழ் தேடுதல் விடுதலை போராட்டத்திற்கு உரம் சேர்க்குமா?
2009ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் தாயகத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் தமிழீழ மக்களது வாழ்வு, மாலுமிகள் இருந்தும், இல்லாதது போல் யாவும் தலைகீழாக நடைபெறுகிறது என சிலரும் பலரும் கதைப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
எதற்கும் அஞ்சமாட்டோம்! ஐ.நாவில் எத்தகைய சவால்கள் வந்தாலும் எதிர்கொள்வோம்: மஹிந்த சமரசிங்க
ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வில் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள இலங்கை தயாராகவுள்ளதாக மனித உரிமை தொடர்பான ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
நிந்தவூரில் பொதுமக்களுக்கும் படையினருக்கும் இடையில் முறுகல்! டயர்கள் எரிப்பு: கர்த்தால் அனுஸ்டிப்பு - விசேட அதிரடிப்படையினரின் பொறுப்பற்ற நடவடிக்கையே பதட்டத்திற்கு காரணம்: ஹரீஸ்
அம்பாறை, நிந்தவூர் கடற்கரை பகுதியில் பொதுமக்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் முறுகல் நிலையொன்று ஏற்பட்டதையடுத்து, துப்பாக்கிப் பிரயோகச் சத்தம் கேட்பதாகவும் தொடர்ந்து பதற்றமான நிலைமையும் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
எதற்கும் அஞ்சமாட்டோம்! ஐ.நாவில் எத்தகைய சவால்கள் வந்தாலும் எதிர்கொள்வோம்: மஹிந்த சமரசிங்க
ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வில் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள இலங்கை தயாராகவுள்ளதாக மனித உரிமை தொடர்பான ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
நம்பியார் வன்னி சென்றிருந்ததால் பிரபாகரன் தப்பியிருப்பார்: கோத்தபாய
ஐக்கிய நாடுகளின் அதிகாரி விஜய் நம்பியாரை முல்லைத்தீவுக்கு அனுமதித்திருந்தால் பிரபாகரன் தப்பியிருப்பார் என்று இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்
கார் - லாரி நேருக்கு நேர்: 4 பேர் பலி
    தருமபுரி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தருமபுரி அருகே ஒடசல்பட்டி கூட்டுரோடு என்ற இடத்தில் கார்
டீ விற்றவர் தான் இந்தியாவின் பிரதமராவார் என்பதை மக்கள் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள்: ராஜ்நாத்சிங்
பெங்களூரு, அரண்மனை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பாஜகவின் இந்தியாவை வெல்லசெய்வோம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பாஜகவின் தேசியத்தலைவர்
 மாவீரர்கள் எமது இரத்த உறவு என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்; அமைச்சர் பொ.ஐங்கரநேசன்
அரசுக்கு பயங்கரவாதிகளாக தெரிபவர்கள் எமக்கு மாவீரர்கள். அவர்கள் எங்களுடைய இரத்த உறவுகள் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும் என  வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.
 பிரித்தானிய பிரதமர் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளார் – முரளீதரன்
news
பிரித்தானிய பிரதமரை சிலர் பிழையாக வழிநடத்தி வருவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார். 
 
குறித்த விடயம் தொடர்பில் கிரிக்கட் வீரர் முத்தையா முரளீதரன் தெரிவித்ததாவது,
 
என்னைப் பொருத்தவரை கடந்த 30 ஆண்டுகளாக பிரச்சினைகள் இருந்து வந்தன. அதிலிருந்து அகல முடியவில்லை யாராலும். போர்க்காலத்தில் ஐநா பிரதிநிதிகளுடன் நானும் அந்தப் பகுதியைப் பார்த்திருக்கிறேன்.ஆனாலும் வசதிகள் வேண்டும். இப்போது சாலைகள் போடப்பட்டுள்ளன, பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன.வர்த்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பல விஷயங்கள் நடந்திருக்கின்றன. வடக்கு முன்னேறி வருகிறது.
 
வடக்கு கிழக்கு நிலைமைகளை நேரில் பார்வையிடாது சிலரது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். 
 
பிரித்தானிய பிரதமர் சரி அல்லது பிழை என எமக்கு குறிப்பிட முடியாது. பிரதமர் கமரூன் ஒரு நாள் மட்டுமே வடக்கிற்கு விஜயம் செய்துள்ளார் என்றார்.

ad

ad