புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 டிச., 2024

மியான்மார் அகதிகள் கேப்பாப்பிலவு விமானப்படை முகாமில் தங்க வைப்பு! [Monday 2024-12-23 16:00]

www.pungudutivuswiss.com


திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார் - ரோஹிங்யா அகதிகள் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு விமானப்படை முகாமில் தங்க வைப்பதற்காக இன்று அழைத்துச் செல்லப்பட்டனர்.
பொலிஸாருக்கு சொந்தமான இரு பஸ்களில் குறித்த அகதிகள் 103 பேரும் பொலிஸ் பாதுகாப்புடன் இன்று  காலை 7.30 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்கள்.

திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார் - ரோஹிங்யா அகதிகள் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு விமானப்படை முகாமில் தங்க வைப்பதற்காக இன்று அழைத்துச் செல்லப்பட்டனர். பொலிஸாருக்கு சொந்தமான இரு பஸ்களில் குறித்த அகதிகள் 103 பேரும் பொலிஸ் பாதுகாப்புடன் இன்று காலை 7.30 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்கள்

22 டிச., 2024

Brexit முடிவால் பிரித்தானியாவிற்கு 27 பில்லியன் பவுண்டு இழப்பு! [Sunday 2024-12-22 07:00]

www.pungudutivuswiss.com

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய 2 ஆண்டுகளில் பிரித்தானியாவிற்கு 27 பில்லியன் பவுண்டு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union) ஒற்றை சந்தை மற்றும் சுங்க ஒன்றியத்தை விட்டு வெளியேற எடுக்கப்பட்ட முடிவு, பிரித்தானியாவிற்கு முதல் இரண்டு ஆண்டுகளில் £27 பில்லியன் ($34 பில்லியன்) இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக புதிய ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய 2 ஆண்டுகளில் பிரித்தானியாவிற்கு 27 பில்லியன் பவுண்டு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union) ஒற்றை சந்தை மற்றும் சுங்க ஒன்றியத்தை விட்டு வெளியேற எடுக்கப்பட்ட முடிவு, பிரித்தானியாவிற்கு முதல் இரண்டு ஆண்டுகளில் £27 பில்லியன் ($34 பில்லியன்) இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக புதிய ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனடாவில் புலம்பெயர்ந்தோரைக் கண்காணிக்க முகம் அடையாளம் காணும் செயலி அறிமுகம்! [Sunday 2024-12-22 07:00]

www.pungudutivuswiss.com

கனடா எல்லை முகமை புலம்பெயர்ந்தோரைக் கண்காணிக்க முகத்தை அடையாளம் காணும் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. கனடாவில், நாடுகடத்தப்படுதல் அல்லது குடியேற்ற நிலை குறித்த இறுதி முடிவுகளுக்காக காத்திருக்கும் போது எல்லை முகவர்களிடம் ரிப்போர்ட் செய்ய வேண்டிய நிரந்தர குடியிருப்பாளர்கள், வெளிநாட்டினர் மற்றும் புகலிட கோரிக்கையாளர்களைக் கண்காணிக்க ReportIn என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கனடா எல்லை முகமை புலம்பெயர்ந்தோரைக் கண்காணிக்க முகத்தை அடையாளம் காணும் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. கனடாவில், நாடுகடத்தப்படுதல் அல்லது குடியேற்ற நிலை குறித்த இறுதி முடிவுகளுக்காக காத்திருக்கும் போது எல்லை முகவர்களிடம் ரிப்போர்ட் செய்ய வேண்டிய நிரந்தர குடியிருப்பாளர்கள், வெளிநாட்டினர் மற்றும் புகலிட கோரிக்கையாளர்களைக் கண்காணிக்க ReportIn என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரஷ்ய போர்முனையில் சிக்கிய தமிழ் இளைஞர்கள் அவசர கோரிக்கை! [Sunday 2024-12-22 05:00]

www.pungudutivuswiss.com


ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதற்காக முகவர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு ரஷ்ய படையில் இணைந்து போர்க்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ள வடக்கு தமிழ் இளைஞர்கள் தங்களை இலங்கைக்கு அழைத்துச் செல்வதற்குரிய நடவடிக்கைகளை யாராவது முன்னெடுக்குமாறு பகிரங்கமான கோரிக்கையை மீண்டும் முன்வைத்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதற்காக முகவர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு ரஷ்ய படையில் இணைந்து போர்க்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ள வடக்கு தமிழ் இளைஞர்கள் தங்களை இலங்கைக்கு அழைத்துச் செல்வதற்குரிய நடவடிக்கைகளை யாராவது முன்னெடுக்குமாறு பகிரங்கமான கோரிக்கையை மீண்டும் முன்வைத்துள்ளனர்

17 டிச., 2024

தலைமன்னார் சிறுமி கொலை சந்தேக நபர் 6 மாதங்களின் பின் சிக்கினார்! [Tuesday 2024-12-17 06:00]

www.pungudutivuswiss.com


தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 55 வயதுடைய நபர் தப்பிச் சென்ற நிலையில் குறித்தநபர் கைது செய்யப்பட்டு நேற்று  மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நபரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டார்.

தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 55 வயதுடைய நபர் தப்பிச் சென்ற நிலையில் குறித்தநபர் கைது செய்யப்பட்டு நேற்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நபரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டார்.

கிளிநொச்சியில் யாழ். இளம்பெண் கடத்தல்! [Tuesday 2024-12-17 06:00]

www.pungudutivuswiss.com


கிளிநொச்சி - இரணைமடுச்சந்தி, கனகாம்பிகைக்குளம் வீதியில் அடையாளம் தெரியாதவர்களினால் 26 வயது இளம் பெண் கடத்தப்பட்டுள்ளார்.   நேற்று மாலை 6 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி - இரணைமடுச்சந்தி, கனகாம்பிகைக்குளம் வீதியில் அடையாளம் தெரியாதவர்களினால் 26 வயது இளம் பெண் கடத்தப்பட்டுள்ளார். நேற்று மாலை 6 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இன்று புதிய சபாநாயகர் தெரிவு - எதிர்க்கட்சி சார்பில் ராேஹினி குமாரி! [Tuesday 2024-12-17 06:00]

www.pungudutivuswiss.com


எதிர்க்கட்சியில் இருந்து சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராேஹினி குமாரி விஜேரத்னவின் பெயரை பிரேரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியில் இருந்து சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராேஹினி குமாரி விஜேரத்னவின் பெயரை பிரேரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

15 டிச., 2024

நானே தமிழரசுக் கட்சியின் பேச்சாளர்: சுமந்திரனின் கருத்துக்கு சிறிநேசன் பதிலடி

www.pungudutivuswiss.com
www.pungudutivuswiss.com

பொன்னம்பலம், மு.

பொன்னம்பலம், மு. (1939 - ) புங்குடுதீவைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். இவர் கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பலதுறைகளிலும் பங்களித்துள்ளார். இவர் 1950களில் கவிதை எழுதத் தொடங்கினார். இவரது முதற்கவிதைத் தொகுதியான 'அது' 1968 இல் வெளிவந்தது.

இவர் அது, அகவெளி சமிக்ஞைகள், கடலும் கரையும், காலி லீலை போன்ற பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவரது "திறனாய்வின் புதிய திசைகள்" என்ற நூலுக்கு மலேசியாவில் தான்சிறீ சோமசுந்தரம் கலை, இலக்கிய அறவாரியம் 2010/2011 ஆம் ஆண்டுகளுக்கான அனைத்துலகப் புத்தகங்களுக்கான இலக்கியப் பரிசாக 10,000 அமெரிக்க டொலர்களை வழங்கியது.

"பொன்னம்பலம், மு." பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 24 பக்கங்களில் பின்வரும் 24 பக்கங்களும் உள்ளன.

14 டிச., 2024

வைவருவதற்கு தாமதமாகியதால் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் குழப்பம்

www.pungudutivuswiss.comமா
வவுனியாவில்(Vavuniya) இடம்பெற்ற தமிழரசுகட்சியின் மத்திய
செயற்குழு கூட்டத்தில் கடும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

மிகவும் விரும்பத்தகுந்த தேசம் பட்டியலில் இந்தியாவை நீக்கிய சுவிட்சர்லாந்து

www.pungudutivuswiss.com

நெஸ்லே வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு சுவிட்சர்லாந்து அரசாங்கம் ஒருதலைப்பட்சமான நிலைப்பாட்டை

அர்ச்சுனாவுக்கு பதிலடி கொடுத்த சத்தியமூர்த்தி! [Saturday 2024-12-14 05:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாண  மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சர்ச்சைக்குரிய விதமாக கேள்வி கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி பதிலடி கொடுத்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சர்ச்சைக்குரிய விதமாக கேள்வி கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி பதிலடி கொடுத்துள்ளார்

அனுர! எல்லாம் பொய்

www.pungudutivuswiss.com
சபாநாயகர் அசோகா சபுமல் ரன்வாலாயின் கல்வி தகைமைகள் சர்ச்சையாகிய நிலையில் அவர் பதவி விலகியுள்ளார்

சமஷ்டி அரசியலமைப்பு குறித்து தமிழ்க் கட்சிகளுக்கிடையில் இணக்கம்

www.pungudutivuswiss.com
இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு தயாரிப்பில்
ஒற்றையாட்சியை நிராகரித்து சமஷ்டி அடிப்படையிலான

ஒன்ராறியோ அரசாங்கம் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் பாதுகாப்பை மீட்கிறது! [Friday 2024-12-13 05:00]

www.pungudutivuswiss.com




 

இன்று ஒன்ராறியோ அரசாங்கம் ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்துகிறது, அது நிறைவேற்றப்பட்டால், நகராட்சிகள் மற்றும் உள்ளூர் காவல்துறையினருக்கு புதிய வளங்கள் மற்றும் அமலாக்கக் கருவிகளை வழங்குவதன் மூலம் சமூகப் பாதுகாப்பை சிறப்பாகப் பாதுகாக்கவும், வீடற்ற முகாம்களின் வளர்ந்து வரும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கும் பயன்பெறும்.

இன்று ஒன்ராறியோ அரசாங்கம் ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்துகிறது, அது நிறைவேற்றப்பட்டால், நகராட்சிகள் மற்றும் உள்ளூர் காவல்துறையினருக்கு புதிய வளங்கள் மற்றும் அமலாக்கக் கருவிகளை வழங்குவதன் மூலம் சமூகப் பாதுகாப்பை சிறப்பாகப் பாதுகாக்கவும், வீடற்ற முகாம்களின் வளர்ந்து வரும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கும் பயன்பெறும்

நீதியமைச்சரின் கலாநிதியும் நீக்கம்! [Friday 2024-12-13 17:00]

www.pungudutivuswiss.com

நாடாளுமன்ற இணையத்தளத்தில் ஆளும் கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரின் கலாநிதி பட்டம் நீக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சரும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷன நாணயக்காரவின் பெயரின் முன்னால் எழுதப்பட்டிருந்த கலாநிதி என்ற பட்டம் தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற இணையத்தளத்தில் ஆளும் கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரின் கலாநிதி பட்டம் நீக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சரும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷன நாணயக்காரவின் பெயரின் முன்னால் எழுதப்பட்டிருந்த கலாநிதி என்ற பட்டம் தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கைச்சாத்து! [Friday 2024-12-13 17:00]

www.pungudutivuswiss.com


தான் கலாநிதி பட்டம் பெற்றதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக இன்று  ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

தான் கலாநிதி பட்டம் பெற்றதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக இன்று ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை

பௌத்த மயமாக்கல் நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சியா? [Friday 2024-12-13 17:00]

www.pungudutivuswiss.com


மட்டக்களப்பு , தாதியர் பயிற்சிக் கல்லூரியில் புத்தர் சிலை நிறுவப்பட்டது வட கிழக்கினை பௌத்த மயமாக்கும் நிகழ்ச்சி நிரலின்  தொடர்ச்சியாக இருக்கக்கூடாது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேசிய அமைப்பாளருமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பு , தாதியர் பயிற்சிக் கல்லூரியில் புத்தர் சிலை நிறுவப்பட்டது வட கிழக்கினை பௌத்த மயமாக்கும் நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேசிய அமைப்பாளருமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்

13 டிச., 2024

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு 30 வருட சிறைத்தண்டனை! [Thursday 2024-12-12 17:00]

www.pungudutivuswiss.com


15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை குற்றவாளியாக இனங்கண்ட, திருகோணமலை மேல் நீதிமன்றம் குற்றவாளிக்கு 30 வருட சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறும் புதனன்று தீர்ப்பு வழங்கியது.

15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை குற்றவாளியாக இனங்கண்ட, திருகோணமலை மேல் நீதிமன்றம் குற்றவாளிக்கு 30 வருட சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறும் புதனன்று தீர்ப்பு வழங்கியது.

ad

ad