பாட்டாளிபுரத்தில் கடந்த 2006 இல் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தியாக தீபம் திலீபன் மருத்துவமனை உள்ளடங்கலான பாட்டாளிபுரத்தின் பெரும் பகுதி கடந்த 13 ஆண்டுகளாக உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடணப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று மாலையில் கடற்படையினர் திடீரென இப்பகுதியிலிருந்து விலகிச் சென்றுள்ளனர் . இதனால் தற்போது மக்கள் தமது சொந்தக்காணிகளுக்கு செல்கின்றனர்.