புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2011





கனிமொழி, ராசா நீதிமன்றத்தில் ஆஜர்; ராசாத்தி அம்மாள் கண்ணீர்

First Published : 21 May 2011 01:21:04 PM IST

புதுதில்லி, மே.21: தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் உள்ளிட்டோர் தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாளும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.
நீதிமன்றத்துக்கு வந்த ராசாத்தி அம்மாள், கனிமொழியைப் பார்த்து கண்கலங்கினார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழி நேற்று கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் கைது செய்யப்பட்டார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் 'கூட்டு சதியாளர்' என துணை குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட கனிமொழியின் ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி நேற்று நிராகரித்து உத்தரவிட்டார். அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியும் உத்தரவு பிறப்பித்தார்.
2ஜி அலைக்கற்றை முறைகேடாக ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி வருமான இழப்பு ஏற்பட்டிருப்பதாக சிஏஜி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதனடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ இந்த முறைகேடு குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டது.
விசாரணையை அடுத்து முதல் குற்றப்பத்திரிகையில் மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா உள்ளிட்ட 8 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து சமீபத்தில் சிபிஐ தனது துணை குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.
அதில் 2ஜி அலைக்கற்றையை விதிமுறைகளுக்கு மாறாக ஒதுக்கீடு செய்ததில் பயனடைந்ததாகக் கூறப்படும் ஷாகித் பல்வாவுக்குச் சொந்தமான டிபி ரியாலிட்டி நிறுவனம், குசேகாவ்ன் மற்றும் சினியுக் பிலிம்ஸ் ஆகியவை மூலமாக கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.214 கோடி நிதி அளித்தது தெரியவந்தது.
இதனடிப்படையில் கலைஞர் தொலைக்காட்சியின் 60 சதவீத பங்குதாரரான தயாளு அம்மாள், 20 சதவீத பங்குதாரரான கனிமொழி, 20 சதவீத பங்குதாரரான கலைஞர் டி.வி. மேலாண்மை இயக்குநர் சரத்குமார் ஆகிய மூவரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.
ஊழல் குற்றச்சாட்டை கவனத்தில் கொள்ளும்போதும் குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் ஜாமீன் அளித்தால், கலைஞர் தொலைக்காட்சியின் ஊழியர்களின் சாட்சியங்களைக் கலைக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே இவர்கள் இருவருக்கும் ஜாமீன் அளிக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார். தொடர்ந்து கனிமொழி, சரத்குமார் ஆகிய இருவரையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி உத்தரவு பிறப்பித்தார்.
திகார் சிறையில் 150 சதுர அடி (15-க்கு 10) அறையில் கனிமொழி அடைக்கப்பட்டுள்ளார்.
அந்த அறையில் ஏ.சி. உள்ளிட்ட வசதிகள் கிடையாது. தொலைக்காட்சி, மின்விசிறி உள்ளிட்ட வசதி அவருக்கு அளிக்கப்படும். செய்தித்தாள்களும் அவருக்கு வழங்கப்படும் . இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரகத்தில் பணி புரிந்து, பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாகக் கைது செய்யப்பட்ட மாதுரி குப்தா, தில்லியில் விபசார வழக்கில் கைது செய்யப்பட்ட சோனு பஞ்சாபன், தில்லியில் கவுன்சிலர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள சாரதா ஜெயின் ஆகியோர் கனிமொழி அடைக்கப்பட்டுள்ள சிறை எண் 6-ல் ஏற்கெனவே உள்ளனர்.
கனிமொழியுடன் கைது செய்யப்பட்ட கலைஞர் டி.வி. மேலாண்மை இயக்குநர் சரத் குமார், சிறை எண் 4-ல் அடைக்கப்பட்டுள்ளார். காமன்வெல்த் விளையாட்டு ஊழலில் சிக்கியுள்ள சுரேஷ் கல்மாடி, நால்கோ முன்னாள் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அபய் குமார் ஆகியோரும் சிறை எண் 4-ல் தான் உள்ளனர்.

இதே வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோரும் திகார் சிறையில்தான் உள்ளனர்.
                                                       நெடியவனை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கம் கோரிக்கை
[ சனிக்கிழமை, 21 மே 2011, 01:41.01 AM GMT ]
கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் தற்போதைய தலைவர்   நெடியவனை  இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டும் என நோர்வேயிடம் அரசாங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கப் பிரமுகர் நெடியவன் கடந்த இருபதாம் திகதி நோர்வேயில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்தது தொடர்பான விசாரணைகள் தற்போது அவரிடம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவ்வாறான நிலையில் அவரைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நோர்வேயிடம் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.
பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபட்டமைக்காக நெடியவன் எனப்படும் சிவபரன் பேரின்பநாயகம் இலங்கையால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருப்பவர் என்று  அரசாங்கம் தனது கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டியுள்ளது.
மேலும் நெடியவன் கைது செய்யப்பட்டிருக்கின்றமை தொடர்பான அனைத்து விபரங்களையும் தங்களிடம் சமர்ப்பிக்குமாறும் அரசாங்கம் நோர்வேயிடம் வேண்டிக்கொண்டுள்ளது. வெளிநாட்டு அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதரகம் நெடியவன் சம்பந்தப்பட்ட விடயங்களைக் கையாளுகின்றது.கருணாநிதியைக் கிண்டலடிக்கும் வைகோ.. காரியம் முடிந்ததும் கதவைச் சாத்திய சோனியா!
[ சனிக்கிழமை, 21 மே 2011, 03:40.05 AM GMT ]
ஈழத் தமிழினம் இனப் படுகொலை செய்யப்பட்ட இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை, கடந்த 18-ம் தேதி பேரெழுச்சியுடன் சென்னையில் நினைவுகூர்ந்தனர் தமிழின உணர்வாளர்கள். எம்.ஜி.ஆர். நகர் சந்தை அருகே, பெரியார் தி.க. நடத்திய பொதுக் கூட்டத்துக்கு 5,000-க்கும் அதிகமான இன உணர்வாளர்கள் திரண்டு வந்திருந்தனர்.
கூட்டத்துக்குத் தலைமை வகித்த பெரியார் தி.க. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், சிங்கள அரசின் மீது இனப் படுகொலைக் குற்றச்சாட்டு வலுத்​துள்ளதை அடுத்து, இரத்தக் கறை படிந்த அந்தக் கொடும் கரங்களைக் காப்பாற்றுவதற்கு இந்திய அரசு முயல்கிறது. ஈழத் தமிழர்களுக்கு அரசியல் உரிமை கிடைக்க உதவி செய்வதாக, கண் துடைப்பு நாடகம் ஆடுகிறது.
தமிழ் மக்களுக்கான பட்ஜெட் போட முடியாத, தமிழர்​களின் நிலத்தை சிங்களர்கள் பறிப்பதைத் தடுக்க முடியாத, பொலிஸ் அதிகாரம் இல்லாத, உலகத்திலேயே விசித்திர​மான ஒரு மாகாண அரசு முறையை ஈழத் தமிழர்கள் மீது இலங்கை திணிக்க இருக்கிறது. அதற்கு உதவியாக இப்போதும் இந்தியா துணை நிற்கிறது.
இதைத் தடுக்க இந்தியக் குடிமகன் எனும் முறையில், நமக்கு உரிமை உண்டு. நம்முடைய உரிமையை ஏற்க மறுத்தால், 'நாங்கள் ஏன் இந்த நாட்டின் குடிமகனாக இருக்க வேண்டும்?  எனக் கேட்கும் நிலை வரும்! என்றார் ஆவேசமாக.
பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி, திம்பு பேச்சுவார்த்தையில் விடுதலைப்புலிகள் இயக்கம்​போலவே, அனைத்துப் போராளி இயக்கங்களும், ஈழ தேசிய இனம், தமிழீழத் தாயகம், தன்னாட்சி என்​பதை வலியுறுத்தின. அதற்குக் காரணம், அப்போது தமிழகத்தில் இருந்த ஆன்டன் பாலசிங்கம், சத்தியேந்திரா, சந்திரஹாசன் ஆகியோர்தான் என நினைத்து, அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியது இந்திய அரசு.
தமிழகமே திரண்டெழுந்து எதிர்த்தவுடன், அப்படியே பின்வாங்கியது டெல்லி. ஈழத் தமிழர்களுக்கு மீண்டும் மீன்டும் இழைக்கப்படும் துரோகத்தை எதிர்த்து, தமிழகத்தில் அதே எழுச்சி வர வேண்டும். வட நாட்டில் இனத்தின் உரிமைக்காகக்கூட இல்லை, கௌரவம் பாதிக்கப்பட்டதற்காக ரயிலை எரிக்கிறார்கள். நாம் எரிக்க வேண்டியது இல்லை, மறித்தாலே போதும்'' என்றார் சீறலாக!
கடைசியாக மைக் பிடித்த வைகோ, 2009 மே மாதம் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில், சாத்தூர் அருகே ஒரு கிராமத்தில் கூட்டத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது, ஈழத்தில் இருந்து கடல் புலிகளின் தளபதி சூசை என்னுடன் தொடர்புகொண்டு பேசினார்.
நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நான் சொன்னதும் கோபப்பட்டார். 'அண்ணா, இங்க எங்கட சனம் செத்துக்கிடக்கு. எங்கு பாத்தாலும் பிணக் குவியல்கள். பிஞ்சுப் பிள்ளையள், பெண்கள், வயோதிகர்கள்னு ஆயிரம் ஆயிரமாய் ரத்தக் காயங்களுடன் கிடக்கிறாங்கள். அவங்கட காயத்தில புழுக்கள் நெளியுதண்ணே. இந்தியா​விலிருந்து எம்.பி-க்களை அனுப்பி இதை வந்து பார்க்கச் சொல்லுங்கண்ணே..என சூசை சொன்னதை மேற்கொண்டு என்னால் கேட்க முடியவில்லை.
ஈழத் தமிழர்களை அழிக்க யுத்தம் நடத்தத் திட்டமிட்டுக் கொடுத்தது, சோனியா உத்தரவின் பேரில் இந்திய அரசுதானே!  எல்லாவற்றையும் செய்துவிட்டு, இன்று இனப் படுகொலைக் குற்றத்தைச் செய்த ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக கூட்டறிக்கை விடுகிறார்களே டெல்லியில்!
தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வது நின்றுவிட்டதாக அப்பட்டமாகப் பொய்யை அவிழ்த்து​ விடுகிறார்கள். தங்கச்சிமடத்தைச் சேர்ந்த நான்கு மீனவ சகோதரிகள் தாலி அறுத்த சோகம் முடிந்து 16 நாள்கூட ஆகவில்லை. என்ன தைரியம் வேண்டும் இப்படிச் சொல்வதற்கு?
கொல்லப்பட்ட தங்கச்சிமடம் மீனவன் அந்தோனிராஜ், கடைசியாக அவன் மனைவியிடம் விடைபெறும்போது, நான் உயிரோடு திரும்ப வேண்டுமானால், இன்று நடக்கும் கிரிக்கெட் போட்டியில் இலங்கை ஜெயிக்க வேண்டும் என்று கர்த்தரிடம் வேண்டிக்கொள் எனச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறான். அந்த மீனவ சகோதரி இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, நான் ஆடிப்போனேன்.
சில பதவிகளுக்காக, முன்னாள் முதல்வர் நாடகம் ஆடினார். திட்டமிட்டே, கருணாநிதிக்கு சில துண்டுகளைப் போட்டார்கள். சில மந்திரி பதவிகளுக்காக தீராப் பழியை, தீராத துன்பத்தைத் தேடித் தந்துவிட்டீர்கள். இதனால், அவமானப்பட்டு கூனிக் குறுகி நிற்கிறீர்கள்.
டெல்லி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சூளுரைத்த கருணாநிதியின் போர்க் குரல் எங்கே? ஜனநாயகத்தை நிலைநாட்ட, முழங்கிய அந்த வீரம் எங்கே? தி.மு.க-வின் அந்த உணர்ச்சி எங்கே? சில பதவிகளுக்காக, நான் -  என் குடும்பம் நல்லா இருந்தாப் போதும் என்று நினைத்தீர்களே! இன்று நடப்பது என்ன?
போயஸ் கார்டனுக்கு சோனியாவின் வாழ்த்துச் செய்தி உடனே போகிறது. முதலமைச்சருக்கு, பிரதமர் வாழ்த்துச் சொல்லலாம். சோனியா எதற்கு வாழ்த்து சொல்கிறார்? காரியம் முடிந்ததும் கருணாநிதியைப் பிடித்து வெளியே தள்ளுகிறார்கள். ஜெயலலிதாவை உள்ளே இழுக்கிறார்கள்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம், கொலைபாதகச் செயலைச் செய்த ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவது பற்றி கேட்​கிறார்கள்.
செய்தியாளரின் கேள்வியிலும் தன்னுடைய பதிலிலும் இந்தப் பிரச்னை அடங்கிவிடாது. அது சர்வதேசப் பிரச்னை! என கருணாநிதி சொல்கிறார்.
ஈழப் பிரச்னையில் மத்திய சர்க்கார்தான் தலையிட வேண்டும் என கீறல் விழுந்த ரெக்கார்டைப்போல கருணாநிதி சொல்லி வந்ததை, இன்றைய முதலமைச்சரும் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார். இதே நிலை நீடித்தால், தமிழ்நாட்டு விவகாரமும் வெளிநாட்டு விவகாரம் ஆகிவிடக் கூடாது என்று எச்சரிக்கிறேன் என்று முடித்தார் கோபமாக!
நன்றி - ஜூனியர் விகடன்
சர்வதேச இலக்காகும் புலிகளின் வலைப்பின்னலும் ஐ.நா. அறிக்கையும்!
[ சனிக்கிழமை, 21 மே 2011, 02:12.15 AM GMT ]
நெடியவன் எனப்படுகின்ற பேரின்பநாயகம் சிவபரன் நோர்வேயில் உத்தியோகபூர்வமாக பிறிதொரு நாட்டால் விசாரிக்கப்பட்டதன் பின்னர் பல தகவல்கள் புலிகளின் புலம்பெயர்ந்த வலையமைப்புக்கள் சிக்கலிற்குள் கொண்டு வரப்படுகின்றன என்று தெரிவித்து வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.
இந்த இடத்தில் தான் ஐக்கிய நாடுகள் சபையின் யுத்தக்குற்ற அறிக்கையில் புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள புலிகள் தொடர்பாக இடம்பெற்ற “வேண்டத்தகாத” நான்கு குறிப்புக்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது.
ஏனென்றால் புலிகள் மீது நடவடிக்கை எடுக்க முனைப்புக் காட்டும் கனடா, சுவிற்சலாந்து போன்றவற்றின் அதிகாரிகள் மட்டத்திலானவர்கள் கூட இப்போது “ஐ.நா.வின் அறிக்கையை” வரவேற்கிறோம் என்ற சொன்னதில் மேற்குறிப்பிட்ட நான்கு பரிந்துரைகளுமே முக்கிய பங்காற்றியிருக்கின்றன.
அந்த நான்கு குறிப்புக்களும் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களை எழுந்தமானத்திற்கு கண்டித்திருப்பதோடு மேற்குலக நாடுகளை புலிகளின் விடயத்தில் அவதானமானச் செயற்படச் சொல்லியும் பரிந்துரைத்திருக்கிறது.
விடுதலைப்புலிகள் தற்போது புலம்பெயர்ந்த நாடுகளில் இப்போது தங்களின் நோக்கத்திற்காகப் பணம் சேர்ப்பதற்காக “மாபியா” பாணியிலான பதாள உலகக் கோஷ்டியின் நடவடிக்கைகளை ஒத்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது புலிகளை ஒரு குற்றவலைப் பின்னல் அமைப்பாக அது பரிந்துரைத்துரைத்துள்ளதைக் காட்டுகிறது.
மேலும் இந்த மேற்கு நாடுகளில் வியாபார நிறுவனங்களை நடத்துதல், அமைப்புக்கள், ஆலயங்கள் மூலம் வருமாணத்தைப் பெறுதல் என்பனவும் நடைபெறுகிறது என்பதையும் பகிரங்கப்படுத்தி, அந்த நாடுகள் இதனைக் கவணித்து தற்போது நடைபெற்றுவரும் மேற்படி நிதி சேகரிப்பையும், விடுதலைப்புலிகளின் சொத்துக்களையும் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ்ச் சமுகத்திற்குப் போய் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
ஐ.நா.வின் அறிக்கைக்கு வலுச் சேர்ப்பதாக விடுதலைப்புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பாக உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் காவற்துறையும் விடுதலைப்புலிகள் தற்போது பணச்சேகரிப்பிற்காக சட்டவிரோதமாக ஆட்களை வெளிநாடுகளிற்கு அனுப்புதல், கடணட்டை மோசடி செய்தல், பயமுறுத்திப் பணம் சேர்த்தல் போன்றவற்றைச் செய்கிறார்கள் எனவும், தங்களது ஊடகங்களை இந்தப் பணச் சேர்ப்பிற்குப் பயன்படுத்துகிறார்கள் என்றும் அதே காலத்தில் அறிவித்தது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் ஐரோப்பாவில் தமிழர்கள் வாழும் நாடுகள் ஏறத்தாள அனைத்துமே இந்த ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அடங்குகின்றன. எனவே இந்த இரண்டு அறிக்கைகளும் மிகவும் சூட்சுமமானவை.
இலங்கையில் இடம்பெற்ற நிகழ்வுகளை விசாரிக்க நியமித்த குழு புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களை குறிவைத்து எந்தவித தயக்கமுன்றி “பாதள உலகக்குழுகள்” பாணியில் அவர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றியது ஐ.நா.வின் குழுவிற்கு தேவையான தகவல்களை நாடுகள் பரிமாறியிருக்கின்றன என்பதைக் காட்டுகிறது.
இந்த நிலையில் இப்போதைய நெதர்லாந்து விசாரணையும், நோர்வே சென்று நெடியவனை விசாரிக்குமளவிற்கு நீளும் கரங்களும் ஒரு உண்மையை வெளிக் கொண்டு வந்துள்ளன.
அதாவது இந்த விவகாரத்தில் பல நாடுகளின் காவல்துறையும், உளவுப்படைகளும் ஒன்றாகப் பணியாற்றுகின்றன. அதன் மூலம் பிரிட்டன், நோர்வே, நெதர்லாந்து, ஜேர்மனி, கனடா, சுவிஸ், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் புலிகளின் வலையமைப்புக்கள் கண்டறியப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகளின் முக்கியமான பரிந்துரையான “மீதமுள்ள புலிகளின் சொத்துக்களை ஈழத் தமிழர்களிற்கு சேர்க்கவும்” என்பது திட்டமிட்ட ரீதியில் புலிகளின் வலைப்பின்னல்கள் முடக்கப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. இதனைத் தான் முள்ளிவாய்க்கால் இரண்டாம் நினைவுநாளில் நோர்வேயில் இடம்பெற்ற விசாரணையும் எடுத்துக் காட்டுகிறது.

கருத்துகள் இல்லை:

ad

ad