புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மே, 2011


ஐநாவில் அதிர்ந்த ஒருவரின் பேச்சு ..-காணொளி உள்


தமிழீழ விடியலை நோக்கி நகரும் மக்களால் தெரிவு  செய்ய பட்ட நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதி நிதிகள்
ஐநா முன்றலில் கூடி தமிழீழ தேசிய துக்க நாளை நினைவு கூர்ந்து அங்கு
சிங்கள இனவெறி அரசினால் அழிக்க பட்ட போது மக்கள் .மற்றும் போராளிகளை நினிவு கூர்ந்தனர் .
இவ்வேளையில் அங்குபல்துறை  அமைச்சு பொறுப்பில் உள்ளவர்களின்
பேச்சுக்கள் அவர் தம் செயல் பட்டு நகர்வுகள் அந்த அரசின் கொள்கை விளக்கங்கள் என்பன
இடபெற்றன .
இதன் போது நாடு கடந்த அரசில்  இருந்து பிரிந்த அணி குழப்பவாதிகளும் அவர்களிற்கு சார்பனா சுவிஸ் விடுதலை புலிகளின்
கிளையினரும் இணைந்து நாடு கடந்த தமிழீழ அரசின் உள்துறை அமைச்சர் மீது காட்டு மிராண்டி தாக்குதலை நடத்தினர் .
கருத்தை கருத்தால் வெல்ல முடியாத இவர்கள் மனித நாகரிகமற்ற இந்த செயலை மனித நாகரிகமுள்ள மக்கள் கண்டிக்கின்றனர் .
மக்களால்  தெரிவு செய்ய பட்ட பிரதி நிதிகளை இவ்விதம்  தமிழ் தேசிய விடுலை மற்றும் தமிழ் தேசிய விடுதலை அரசியல் பேசும்
புலிகளின் சுவிஸ் கிளையின் செயல் பாடு கண்டிக்க பட வேண்டியது .
இதை மறுத்துரைத்தால்  எம்முடன் நேரடி விவாதத்திற்கு வருமாறு சுவிஸ் கிளையினரை வேண்டி கொள்கின்றோம் .
இது தனி நபர் தாக்குதலோ அல்லது ஒரு அமைப்பின் மீதான தாக்குதலோ அல்ல என்பதும்
மக்களின் பிரதி நிதி தாக்க பட்டது தவறு என்ற வகையிலுமே இந்த கண்டனத்தினையும் செய்திகளையும் பிரசுரிக்கின்றோம் .
உங்கள் கருத்துகளையும் நாம்உள்வாங்கி  பிரசுரிக்க தயாராகவுள்ளோம் என்பதனை திட்டவட்டமாக தெரிவித்து கொள்கின்றோம் .



நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ராமச்சந்திரன் கைது - கேபி உள்ளிட்ட 13 முன்னாள் போராளிகளிடம் நெதர்லாந்து அதிகாரிகள் விசாரணை
[ புதன்கிழமை, 25 மே 2011, 05:10.46 AM GMT ]
நெதர்லாந்தில் செயற்பட்டு வந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் எஸ்.ராமச்சந்திரன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் பிரிவொன்றின் தலைவராகவும், முக்கிய தளபதிகளில் ஒருவராகவும் செயற்பட்டு வந்த நெடியவன் எனப்படும் சிவரூபன் நோர்வேயில் கைது செய்யப்பட்டதன் பின் நெதர்லாந்தில் ராமச்சந்திரனின் கைது சம்பவம் நடைபெற்றுள்ளது.
ராமச்சந்திரனின் வீட்டை சோதனையிட்ட பொலிசார் பென் டிரைவ் (யு.எஸ்.பி) யில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 136 மில்லியன் பணம் தொடர்பான விபரங்களையும் கைப்பற்றியுள்ளனர். அப்பணம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் ஆயுதக் கொள்வனவுக்காக ஐரோப்பிய வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
நெதர்லாந்தில் விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்யும் ஒபரேசன் கொன்னிக் நடவடிக்கையின் ஒரு கட்டமாகவே ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய நெதர்லாந்து அலுவலகத்தில் பிரதானியாக செயற்பட்ட ஞானம் என்பவரும் நெதர்லாந்தின் இரகசியப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் இவர்களுடன் தொடர்பைக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் ஹேக், ட்ராசெய்ஸ்ட், அம்ஸ்டர்டாம், ரல்டே மற்றும் அமசோடம் ஆகிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளையடுத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலிகளின் நிதி விவகாரம் – கேபி உள்ளிட்ட 13 முன்னாள் போராளிகளிடம் நெதர்லாந்து அதிகாரிகள் விசாரணை

 விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்புத் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நெதர்லாந்து அதிகாரிகள் சிறிலங்காவில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளிடம் விசாரணை நடத்த அனுமதி கோரியுள்ளனர்.

 இதுதொடர்பாக நெதர்லாந்து வானொலி வெளியிட்டுள்ள தகவலில், குமரன் பத்மநாதன் உள்ளிட்ட 13 பேரை அடுத்த மாதம் விசாரிக்க சிறிலங்காவிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதுதொடர்பாக சிறிலங்கா சட்டமா அதிபர் மொகான் பீரிசுடன் நெதர்லாந்து அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.

 அதேவேளை, இந்த விவகாரம் பற்றிய சாட்சியங்களைப் பெறுவதற்காக நெதர்லாந்து நீதிவான்களும், சட்டவாளர்களும் அமெரிக்காவுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

 அமெரிக்காவில் இவர்கள் புலிகளின் ஆயுதக்கொள்வனவு நடவடிக்கைகளில் தொடர்புடைய பிரதீபன் தவராசாவிடம் விசாரணை நடத்தவுள்ளனர்.

 இவர் அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் விடுதலைப் புலிகளுக்கு வெடிபொருட்கள், இயந்திரத் துப்பாக்கிகள், ஏவுகணைகள், ஆட்டிலறிகள், ரேடர்கள் போன்ற ஆயுதங்களை கொள்வனவு செய்திருந்தார்.

 இவரது மடிக்கணினியில், 20மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கான முன்னுரிமைப் பட்டியல் ஒன்றை அமெரிக்காவின் சமஸ்டி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்திருந்தனர்.

 அந்தப் பட்டியலில் ஒவ்வொன்றும் 160,000 டொலர் பெறுமதியான 25மி.மீ விமான எதிர்ப்புப் பீரங்கிகள் ஆறு, ஒவ்வொன்றும் 30,000 டொலர் பெறுமதியான ரைப்- 69 ரகத்தைச் சேர்ந்த இரட்டைக்குழல் 30மி.மீ கடற்படைப் பீரங்கிகள் ஆறு, ஆயிரக்கணக்கான தன்னியக்கத் துப்பாக்கிகள், மில்லியன் கணக்கான ரவைகள்., கிரனேட் செலுத்திகள், 50 தொன் சி-4 வெடிமருந்து, 5 தொன் ஆர்டிஎக்ஸ் வெடிபொருள், 50 தொன் ரிஎன்ரி சீன வெடிபொருள், விமானக் குண்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் 50 தொன் ட்ரைரோனல் வெடிபொருள் ஆகியவை இருந்ததாக அமெரிக்காவின் சமஸ்டிப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 நெதர்லாந்தில் உள்ள இராமச்சந்திரன் என்பவர் இந்த ஆயுதக்கொள்வனவுகளுடன் தொடர்புபட்டிருந்ததாக பிரதீபனின் மடிக்கணினியில் இருந்த தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது.

 இதையடுத்தே நெதர்லாந்து விசாரணைக் குழுவொன்று இன்று ஒஸ்லோவுக்கு செல்லவுள்ளது.

 சந்தேகநபர்களின் சட்டவாளர்களை உள்ளடக்கிய இந்தக் குழுவினர் நெடியவனினிடம் விசாரணை நடத்தவே ஒஸ்லோ செல்லவுள்ளனர்.

 இவர் விடுதலைப் புலிகளுக்கு மில்லியன் கணக்கான டொலர் பணத்தை வழங்கியதாக நெதர்லாந்து அதிகாரிகள் நம்புகின்றனர்.

 ‘ஒப்பரேசன் கொனின்க்‘ என்ற பெயரில் நெதர்லாந்து அதிகாரிகள் விடுதலைப் புலிகளின் இந்த நிதி வலையமைப்பு மீதான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

 இந்த நடவடிக்கையில் நெதர்லாந்தில் 90 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 டசின் கணக்காக வீடுகளில் நடத்தப்பட்ட தேடுதல்களில் கணினிகள், இறுவட்டுகள், ஆவணங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் நெதர்லாந்து வானொலி தகவல் வெளியிட்டுள்ளது.







விளம்பர பதாகைகளுக்கு அனுமதி வழங்கியதில் யாழ்.மாநகர மேயர் பெரும் மோசடி
[ புதன்கிழமை, 25 மே 2011, 02:12.15 AM GMT ]
யாழ். மாநகர சபை எல்லைக்குள் விளம்பரப் பதாகைகளுக்கு அனுமதி வழங்கியதில் பெரும் மோசடி இடம்பெற்றுள்ளது. இதனால் 2010 ம் ஆண்டில் மாநகரசபைக்கு 50 லட்சத்து 09 ஆயிரத்து 833 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஊழல் தொடர்பாக உயர் மட்ட விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்த மோசடி தொடர்பாக யாழ்.மாநகர முதல்வருக்கும் ஆணையாளருக்கும் விளக்கம் கேட்டு 13.10.2010 ல் கணக்காய்வாளர் திணைக்களத்தால் அனுப்பப்பட்ட கடிதத்துக்கு இன்று வரை மாநகரசபையிடம் இருந்து எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை என கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் யாழ்.கிளையின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
கணக்காய்வாளர் திணைக்களத்தின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கமுடியாமல் தடுமாறும் மாநகர முதல்வர், தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி மோசடியைக் கண்டு பிடித்து வெளிப்படுத்திய அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
மாநகர சபை எல்லைக்குள் நல்லூர் கோயில் பின் பக்கவீதியில் ஒன்பது பதாகைகள் எந்த விதமான கட்டணமோ அனுமதியோ இன்றிக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மாநகர சபைக்கு வரவேண்டிய 50 லட்சத்து 09 ஆயிரத்து 833 ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது.
மாநகர சபையின் அங்கீகாரம் இன்றி விளம்பரப் பதாகைகளுக்கான கட்டணம் இரண்டு மடங்காக அறவிடப்பட்டுள்ளது. கட்டண அதிகரிப்புத் தொடர்பாக பகிரங்க அறிவிப்போ அன்றி அரச வர்த்தமானி அறிவித்தலோ விடப்படவில்லை.
அத்துடன் அங்கீகாரம் இன்றிக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகளில் தனிப்பட்ட தொலைபேசி இலக்கம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.


நிபுணர்குழு அறிக்கை தொடர்பில் இலங்கைக்குச் சீனா முழுமையாக ஆதரவு!
[ புதன்கிழமை, 25 மே 2011, 03:08.24 AM GMT ]
ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரின் நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இலங்கைக்கு முழு ஆதரவும் வழங்கப்படுவதை சீனா உறுதிப்படுத்தியுள்ளது.
தங்களுடைய பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளும் தகுதியும் வல்லமையும் இலங்கை அரசுக்கும் மக்களுக்கும் இருக்கின்றது என்று சீனா முழுமையாக நம்புகின்றது என அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜங்ஜிச்சி தெரிவித்தார்.
இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை பீஜ்ஜிங் சென்ற வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சீன வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இக் கலந்துரையாடலின்போது ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை குறித்தும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்தும் பீரிஸ் சீன வெளிவிவகார அமைச்சருக்கு விளக்கினார் என்று கொழும்பில் வெளிவிவகார அமைச்சுஅதிகாரிகள் தெரிவித்தனர்.
இத்தகைய சூழலில் எல்லாப் பிரச்சினைகளையும் இலங்கை அரசும் மக்களும் தமக்குள்ளேயே தீர்த்துக் கொள்ளும் ஆற்றலும் வலுவும் கொண்டிருக்கிறார்கள் என்று சீனா முழுமையாக நம்புவதாக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜங் ஜிச்சி தெரிவித்துள்ளார் என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
தேசிய நல்லிணக்கம் மற்றும் மீள்கட்டுமானம் என்ற இலக்குகளை இலங்கை அடைவதற்கு சீனா என்றும் துணை நிற்கும் என்றும் ஜங் ஜிச்சி தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சீனாவுக்கு வருகை தருவதற்கான அழைப்பு ஒன்றையும் அமைச்சர் பீரிஸிடம் அவர் விடுத்தார்.
நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இந்தியாவுக்கு அமைச்சர் பீரிஸ் மேற்கொண்ட பயணம் வெற்றியளிக்காத நிலையில், அவரது சீனப் பயணம் சாதகமாக அமைந்துள்ளது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.


நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்வதற்கு இலங்கை இராணுவத்தினரின் தகவல்களே உதவின: நெதர்லாந்து ஊடகங்கள்
[ புதன்கிழமை, 25 மே 2011, 06:16.44 AM GMT ]
நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்வதற்கு இலங்கை இராணுவத்தினரின் தகவல்களே உதவியதாக நெதர்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களில் இருந்து விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புத் தொடர்பாகக் கிடைத்த தகவல்களைக் கொண்டே இலங்கை இராணுவத்தினர் நெதர்லாந்தில் செயற்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் தொடர்பான தகவல்களை வழங்கியிருந்தனர்.
அதனை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலமாகவே விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் நெதர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
இலங்கை இராணுவத்தினரின் தகவல்களைக் கொண்டே நெதர்லாந்தில் செயற்பட்ட விடுதலைப் புலிகளின் வலையமைப்பைக் கண்டறிந்து அதன் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய முடிந்துள்ளதாக நெதர்லாந்தின் அரச வானொலியும் செய்தியொன்றை ஒலிபரப்பியுள்ளது.
அண்மையில் நோர்வேயில் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் நெடியவன் கைது செய்யப்பட்டதன் பின்னணியிலும் இலங்கை இராணுவ உளவுப் பிரிவின் தகவல்களே முக்கிய பங்கு வகித்திருந்ததாகவும் சில தகவல்கள் கசிந்துள்ளன.

போலிக்கடவுச்சீட்டுடன் சென்னையில் கைதான இலங்கைப் பெண்!

E-mailஅச்சிடுகPDF
இந்தியாவிலிருந்து போலிக் கடவுச் சீட்டினை பயன்படுத்தி இலங்கை வரமுற்பட்ட இலங்கைப் பெண்ணொருவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

வசந்தி என்ற 42 வயதுடைய பெண்ணே இந்தியக்கடவுச்சீட்டை பயன்படுத்தி நேற்று காலை இலங்கை வரமுற்படும்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த பெண் இதற்கு முன்னர் இரு தடவை இந்தியக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்கு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 

இந்திய பிரஜையான சிறிரமாலு என்பரை திருமணம் செய்து கொண்ட வசந்தி கடந்த 20 வருடங்களாக கிரிஸ்ணகிரி பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார். 

1994ஆம் ஆண்டு முகவர் ஒருவர் மூலம் இந்தியக் கடவுச்சீட்டினை பெற்றுக்கொண்ட வசந்தி 2004ஆம் ஆண்டு அதனை புதுப்பித்துள்ளார். 

இந்தியாவில் தான் பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளதாக வசந்தி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். 

எனினும் மேலதிக விசாரணைகளுக்காக குடிவரவு அதிகாரிகள் குறித்த பெண்ணை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

ad

ad