புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஆக., 2012


ஜெயலலிதாவுடன் தா.பாண்டியன் சந்திப்பு: இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுக்க புதிய அமைப்பை உருவாக்க வேண்டுகோள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில தலைவர் தா.பாண்டியன் இன்று முதல் அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இலங்கைத் தமிழர் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர் பிரச்சினை குறித்து
ஆலோசனை நடத்தினார்.

பின்னர் தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:- 

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அவர்களுக்கு ஒரு நல்ல முடிவு கிடைப்பதற்காக அ.தி.மு.க., தோழமைக் கட்சிகள் மற்றும் இணக்கமான கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு புதிய அமைப்பைத் தொடங்கவேண்டும். 

தமிழர்கள் பிரச்சினையை தெரிவிப்பதற்கு இந்த அமைப்பு பயன்படும். தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் பாதிக்கப்படுகின்றனர். இதையும் எடுத்துச் சொல்ல இந்த அமைப்பு தேவை. 

எனவே, தமிழக மீனவர்கள் நலனுக்காகவும் தமிழர்களின் நலனுக்காகவும் இந்த அமைப்பை தோற்றுவிக்கவேண்டும் என்று முதல்வரிடம் தெரிவித்தேன். நிச்சமாக செய்வோம் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார். 

இவ்வாறு அவர் கூறினார்

ad

ad