புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 அக்., 2012


தமிழக அமைச்சரவை மாற்றம்: புதிய அமைச்சராக சங்கராபுரம் தொகுதி பி.மோகன் நியமனம்
சங்கராபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ பி.மோகன் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஊரக தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. 

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் பேரில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, வணிகவரித்துறை அமைச்சராக பதவி வகித்த சி.வி.சண்முகம் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
சி.வி.சண்முகம் வகித்து வந்த வணிகவரித்துறை, பதிவுத்துறை ஆகியவை அமைச்சர் பி.வி.ரமணாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

சங்கராபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏவும், அரசு தலைமைக் கொறடாவுமான பி.மோகன் ஊராகத்தொழிற்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 

சமூக நலத்துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் பா.வளர்மதிக்கு சத்துணவுத் திட்டத்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதுவரை, ஊரகத் தொழில்துறை அமைச்சராகப் பதவி வகித்த எம்.சி.சம்பத்தின் இலாகா மாற்றப்பட்டு, அவருக்கு சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வரும் என்.ஆர்.சிவபதிக்கு கூடுதலாக, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், பணியாளர் நலன் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை, லஞ்ச ஒழிப்பு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பி.மோகன் வரும் 6.10.2012 காலை 11 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பதவியேற்றுக்கொள்கிறார்.

ad

ad