புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 அக்., 2012

பெண்களிடம் பாலியல் லஞ்சம் பெற்றுக்கொண்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கணவன்மாருக்கு எதிரான பொலிஸ் விசாரணைகளை சுமூகமாக முடித்துக் கொள்ளும் நோக்கில் இரண்டு பெண்களிடம் இவ்வாறு பாலியல் லஞ்சம் பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஊழல் தவிர்ப்பு பிரிவினர் குறித்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்துள்ளனர்.
பொலனறுவை புலஸ்திபுர மற்றும் எப்பாவல ஆகிய பிரதேசங்களில் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கணவருக்கு எதிராக நிதி மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற விசாரணைகளில் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமாயின் பாலியல் லஞ்சம் வழங்குமாறு குறித்த நபரின் மனைவியிடம் பொலிஸ் உத்தியோகத்தர் கோரியுள்ளார்.
அனுராதபுரம் கலாஓய விடுதி ஒன்றில் குறித்த பெண்ணுடன் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரை லஞ்ச ஊழல் தவிர்ப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, கணவருக்கு எதிரான வழக்கு விசாரணைகளை சுமூகமாக நடத்தி ஒற்றுமையுடன் வாழ ஒத்துழைப்பு வழங்குமாறு மற்றுமொரு பெண், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரிடம் கோரியுள்ளார்.
இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற லஞ்சமாக உடலை வழங்குமாறு அந்த பொலிஸ் சார்ஜன்ட் கோரியுள்ளார்.
அந்த நிபந்தனைக்கு உடன்பட்ட குறித்த பெண் ஹிங்குராக்கொட விடுதி ஒன்றுக்கு சென்ற போது லஞ்ச ஊழல் தவிர்ப்பு பிரிவினர் பொலிஸ் சார்ஜன்ட்டை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் விசாரணைகளின் பின்னர் அனுராதபுரம் மற்றும் பொலனுவை நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட்டனர்.

ad

ad