புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 அக்., 2012


கரினாகபூர்- சயிப் திருமணம் கோலகலமாக முடிந்தது: நடிகர்- நடிகையர் வாழ்த்து

பாலிவுட் நட்சத்திரங்களான கரீனாகபூர், சயீப்அலிகான் திருமணம் மும்பையில் இன்று கோலாகலமாக நடந்தது.
கரீனா கபூர் இந்தி நடிகர் ராஜ்கபூரின் பேத்தி ஆவார். சயீப் அலிகான் நவாப் பரம்பரையை சேர்ந்தவர்.
சயீப் அலிகான் ஏற்கனவே இந்தி நடிகை அமிரிதா சிங்கை காதல் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்து விட்டார்.
அவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இரு குழந்தைகளும் இன்று திருமணத்தில் கலந்து கொண்டனர்.
கரீனாகபூருக்கு சயீப் அலிகானுக்கும் விசேஷ ஆடை வடிவமைப்பாளர்களை வைத்து முகூர்த்த ஆடைகள் தயார் செய்யப்பட்டு இருந்தன.
அவற்றை இருவரும் உடுத்தி இருந்தார்கள். நவாப் பரம்பரை பாரம்பரியபடி இந்த திருமணம் நடந்தது.
இந்தி நடிகர்- நடிகைகள், நெருங்கிய உறவினர்கள் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
கரீனாகபூர், சயீப்அலிகான் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாளை மறுநாள் (18ம் திகதி) மும்பையில் நடைபெற உள்ளது.
அனைத்து மொழி நடிகர், நடிகைகளும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். மந்திரிகள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்களும் கலந்து கொண்டு வாழ்த்துகிறார்கள்.

ad

ad