புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 டிச., 2012


யாழில் கைது நடவடிக்கை தொடர்கிறது! நேற்றிரவு அச்சுவேலி பொலிஸாரினால் 15 பேர் கைது
யாழ்ப்பாண குடாநாட்டில் கைது நடவடிக்கைகள் தொடர்கிறது இதனால் பிரதேச மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். நேற்று சனிக்கிழமை இரவு யாழ்.  புத்தூர் கிழக்கு பிரதேசத்தில் சுமார் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் அனைவரும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட 15 பேரும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு கொழும்புக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

ad

ad