புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஏப்., 2013


நள்ளிரவில் தம்பதிகள் இருவர் வெட்டிக்கொலை: மட்டக்களப்பில்
மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேசத்தில் தம்பதிகள் இருவர் நள்ளிரவில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செங்கலடி விப்ரா பென்சி கோணர் உரிமையாளரும் அவரது மனைவியுமாகிய சிவகுரு ரகு, ரகு விப்ரா ஆகிய இருவருமே இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இக் கொலைச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் பதுளை வீதியில் அமைந்துள்ள அவர்களது வீட்டிற்கு வருகைதந்த இனம் தெரியாத நபர்கள் இவர்களை தலையில் தாக்கியுள்ளதுடன் கழுத்தில் கத்தியால் வெட்டியும் உள்ளனர்.
இதனால் சம்பவ இடத்திலேயே இருவரின் உயிர் பிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செங்கலடி மக்கள் மத்தியில் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இக் கொலைச் சம்பவம், குறித்த மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad