புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2013


புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அமெரிக்கா, பின்லாந்து, சுவீடனில் அடைக்கலம்
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அமெரிக்கா, பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் சென்ற இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள், படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக டுபாயில் அடைக்கலம் கோரியிருந்தனர்.
மனிதாபிமான அடிப்படையில் குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் டுபாயில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
45 பேர் இந்தப் படகில் பயணித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அமெரிக்கா, பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் படகுப் பயணிகளில் பெண் ஊடகவியலாளர் ஒருவரும் உள்ளடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad