என் சடலத்தின் மீது புலிக்கொடி போர்த்தவேண்டும் :
மணிவண்ணன் கடைசி ஆசை
மணிவண்ணன் கடைசி ஆசை
தமிழ்சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன் (வயது 59) இன்று (15.6.2013) மாரடைப் பால் சென்னையில் மரணம் அடைந்தார்.
இவர் இயக்கத்தில் சத்யராஜ் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது அமைதிப்படை -2வான நாகராஜசோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ படம். இப்படத்தின் விழா ஒன்றில் பேசிய மணிவண்ணன், ‘’நான் மட்டும் ஈழத்தில் பிறந்திருந்தால் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராளியாகி வீர மரணம் அடைந் திருப்பேன்.
தமிழ்நாட்டில் பிறந்துவிட்டதால், ஈழ உணர்வோடு வாழ்கிறேன். என் மரணத்திற்கு பிறகு சொந்தம் பந்தம் என்று சொல்லிக்கொண்டு ஓடிவருவார்கள். அவர்களிடம் என் உடலை ஒப்படைக்கக்கூடாது.
என் உடம்பை சீமானிடம் ஒப்படைத்துவிடவேண்டும். அவர்தான் இறுதிச்சடங்கு செய்யவேண்டும். என் சடலத்தின் மீது விடுதலைப்புலிகள் கொடி போர்த்த வேண்டும். இதுதான் என் கடைசி ஆசை. வேறொன் றுமில்லை’’ என்று கூறினார்.
என் உடம்பை சீமானிடம் ஒப்படைத்துவிடவேண்டும். அவர்தான் இறுதிச்சடங்கு செய்யவேண்டும். என் சடலத்தின் மீது விடுதலைப்புலிகள் கொடி போர்த்த வேண்டும். இதுதான் என் கடைசி ஆசை. வேறொன் றுமில்லை’’ என்று கூறினார்.
அவரின் கடைசி ஆசை நிறைவேறுமா?