புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூலை, 2013

வவுனியா நகரில் உள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றில் சுவர்களை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள் அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் என்பவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக, வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருக்கின்றது.
செவ்வாய்க்கிழமை இரவு பத்து மணியளவில் சுவரை உடைத்துக் கொண்டு சென்ற கொள்ளையர்கள் அதிகாலை 3 மணிவரையில் உள்ளே இருந்ததாக பொலிசாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தச்
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்ற பொலிசார், சம்பவம் நடைபெற்ற கடைக்கு அடுத்த கடையில் பணியாற்றுபவர்களை விசாரணைக்கு உட்படுத்தியிருக்கின்றனர்.
கொள்ளையிடப்பட்ட வர்த்தக நிறுவனம் வவுனியா நகரில் பழைமை வாய்ந்தது என்பதுடன், பொலிஸ் நிலையத்திற்கு எதிர்ப்பக்கமாக நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,
கொள்ளையிடப்பட்ட பொருட்கள் மற்றும் ரொக்கப்பணத்தின் பெறுமதி பல லட்சங்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

ad

ad