புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2014

இலங்கையில் தொடரும் பயங்கர சூழல் : ஐ.நா ஆணையாளர் அச்சம் 
news
இலங்கையில் மனித உரிமைகளுக்காக செயற்படும் சமூகத்தினருக்கு எதிராக பிரயோகிக்கப்படும்  பயமுறுத்தல்களையிட்டு   நான் அச்சமடைந்துள்ளேன் என ஐக்கிய நாடுகள்  மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
 
ஐ.நா சபையின் 27 ஆவது அமர்வு இன்று ஆரம்பமான போது தனது ஆரம்ப உரையில் மனித உரிமை ஆணையகத்தின் புதிய ஆணையாளர்  இதனைத் தெரிவித்தார்.
 
அவர் மேலும் தனது உரையில்,
 
இலங்கையில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களும் வன்முறையும்
 அரங்கேறி வருவதை தான் கண்டிப்பதாகவும் ஹுசைன் குறிப்பிட்டுள்ளார்.
.
இலங்கையிலிருந்து படகில் செல்வோர்கள் உட்பட கடல் வழியாக அவுஸ்திரேலியா செல்லும் தஞ்சக் 
கோரிக்கையாளர்களை வெளிநாடுகளில் வைத்து அவுஸ்திரேலியா பரிசீலிப்பதையும் படகுகளை வழியிலேயே தடுத்து திருப்பி அனுப்புவதையும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் விமர்சித்துள்ளார்.
 
இப்படியான காரியங்களால் யதேச்சதிகாரமாக தடுத்து வைக்கப்படுதல், சொந்த நாடுகளில் சித்திரவதைக்கு ஆளாக
நேர்தல் போன்ற பல மனித உரிமை மீறல்கள் வரிசையாக நடக்கக்கூடிய ஆபத்து உள்ளது என அவர் எச்சரித்துள்ளார்.
 
மேலும் இலங்கை தொடர்பாக கடந்த மார்ச் மாதத்தில் ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானம் ஒன்றை 
நிறைவேற்றியிருந்தது. இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த உள்நாட்டு 
போரின் இறுதிக் கட்டத்தில் நடந்ததாக குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா மனித
 உரிமை ஆணையாளர் அலுவலகம் விசாரணை ஒன்றை நடத்தும் என்று அந்த தீர்மானத்தில் பணிக்கப்பட்டிருந்தது.
 
இந்த விசாரணைக்கு ஒத்துழைக்க இலங்கை அரசாங்கம் மறுத்துவரும் நிலையில் விசாரணையில் முன்னேற்றம்
எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை.ஆனாலும் நடைபெறவுள்ள கூட்டத் தொடரில் இந்த விசாரணை சம்பந்தமாக ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலுக்கு ஆணையாளர் வாய்மொழியாக விவரம் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ad

ad