உள்ளுர் பொறிமுறையின் ஊடாக இலங்கை அரசாங்கம் மனித உரிமை விடயங்களில் செயற்படும் விதம் குறித்து ஆராய, ஜப்பானிய அரசாங்கம் உயர் வழக்கு தொடுநர் ஒருவரை இலங்கைக்கு அனுப்பவுள்ளது.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இந்த தகவல் இன்று வெளியிடப்பட்டது.
இதன்படி கம்போடியா தனிச்சிறப்பு உயர்நீதிமன்றத்தின் சர்வதேச நீதியரசர் மொட்டூ நொகாச்சி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்.
அவர், அடுத்த மாதத்தில் இலங்கைக்கு செல்லவுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் உண்மையான தேசிய நல்லிணக்கம் ஏற்பட ஜப்பான் உதவி வழங்கும் என்று ஜப்பான் இன்று அறிவித்துள்ளது