ஐ.நா. மனித உரிமை பேரவையில் நேற்று நடைபெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தின் போது இந்தியாவும், சீனாவும் மௌனம் காத்ததை காண முடிந்தது.
அமெரிக்கா பிரிட்டன் கனடா, அவுஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இலங்கை தொடர்பில் நேற்றைய தினம் உரையாற்றிய போதும் இந்தியாவும், சீனாவும் மௌனம் காத்தன.
இந்தியாவினதும் சீனாவினதும், பிரதிநிதிகள் இலங்கை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டபோதும் விவாதத்தில் உரையாற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.