புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 அக்., 2015

தெற்கின் பிரபல அமைச்சர் ஒருவர் பதவியிழக்கக்கூடிய அபாயத்தில்


தெற்கின் பிரபல அமைச்சர் ஒருவர் அமைச்சுப் பதவியை இழக்கக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பல்வேறு ஊழல் மோசடிகள் தொடர்பில் இந்த அமைச்சருக்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தென் மாகாணத்தைச் சேர்ந்த இந்த அமைச்சர் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிக முக்கியமான அமைச்சுப் பதவியை வகித்து வரும் இந்த அமைச்சர் எதிர்வரும் வாரங்களில் அமைச்சுப் பதவியை இழக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரிய சர்ச்சைக்குரிய பல்வேறு கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான விசாரணைகளை மூடிமறைக்கும் முயற்சியின் திரைமறைவில் இந்த அமைச்சர் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்காக பெருந்தொகைப் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அமைச்சர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தொகுதி உறுப்பினர்கள் பிரதமரிடம், சுதந்திரக் கட்சியின் ஒரு தொகுதி உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் எதிர்வரும் நாட்களில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யவுள்ளனர்.
இதன்படி, அநேகமாக எதிர்வரும் சில வாரங்களில் இந்த அமைச்சர் பதவியை இழக்கலாம் என குறித்த கொழும்பு ஊடகம் ஊகம் வெளியிட்டுள்ளது.

ad

ad