புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2015

லாலுவுக்கு எதிராக மந்திரம் சொல்லி மந்திராவாதியுடன் பூஜை செய்தாரா நிதிஷ்குமார்?

பீகார் மாநிலத்தில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நேற்று அந்த மாநில முதல்வர் நிதிஷ்குமார் மந்திரவாதி ஒருவருடன்
பூஜையில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் சர்ச்சை எழுந்துள்ளது.  

                                     
பீகாரில் 3-ம் கட்ட தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஐந்து கட்டமாக நடந்து வரும் தேர்தலில், வரும் 29-ம் தேதி 3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், பாஜக-வின் மூத்த தலைவரும் மத்திய இணை அமைச்சருமான கிரிராஜ் சிங் இணையதளங்களில் ஒரு வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோ இணையங்களில்  வைரல் ஆனது. 

வீடியோ பதிவில் பிகார் முதல்வர் நிதிஷ்குமார் அருகில் மந்திரவாதி ஒருவர் இருக்கிறார். நிதிஷ் கட்சியின் மோகமா தொகுதி வேட்பாளர் நீரஜ் குமாரும் அருகில் அமர்ந்துள்ளார்.  பின்னர் நிதீஷுக்கு ஆதரவாக மந்திரவாதி சில மந்திரங்களை சொல்கிறார். இருவருக்கும் இடையே உரையாடல்கள் நடந்தாலும் தெள்ளத் தெளிவாக கேட்க முடியவில்லை. 

இந்த பூஜையின்போது, நிதிஷ் குமாரின் பரம எதிரியாக இருந்து தற்போது அவருடன் கைகோத்துள்ள  லாலு பிரசாத் யாதவுக்கு எதிராகவும் அந்த மந்திரவாதி சில மந்திரங்களை சொல்லி பூஜிப்பதாக சொல்லப்படுகிறது.  நிதிஷின் கூட்டணியில்  லாலு பிரசாத்துக்கு எதிராக மந்திரம் சொன்னதாக கிளம்பி இருக்கும் விவகாரம், தற்போது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து லாலு கூறும்போது, “இந்த மந்திரவாதி தந்திரவாதி பற்றி எனக்கு எந்த பயமும் கிடையாது. நானே பெரிய மந்திரவாதிதான்'' என்றார். இந்த வீடியோ குறித்து நிதிஷ் குமாரோ, அவரது கட்சியின் மூத்த தலைவர்களோ இதுவரை கருத்து எதுவும் கூறவில்லை. 

பீகார் தேர்தலில் லாலுவின் ராஸ்டிரிய ஜனதா தளம், நிதிஷின் ஒருங்கிணைந்த ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகியவை இணைந்து மெகா கூட்டணி அமைத்து பாரதிய ஜனதாவை எதிர்த்து களத்தில் நிற்கின்றன. 

ad

ad