புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 நவ., 2015

சிறையில் இருந்து 30 தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுதலை


இலங்கை சிறைகளில் இருந்து முதல் கட்டமாக 30 தமிழ் அரசியல் கைதிகள் இன்று பிணையில் விடுவிக்கப்படுகின்றனர். இலங்கை அரசு அளித்த வாக்குறுதியின் படி செயல்படவில்லை எனக் கூறி 200-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறைகளில் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியுள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
இதனிடையே, வரும் 20-ம் தேதிக்குள் மேலும் 31 தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
 
இலங்கை சிறைகளில், தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏராளமான தமிழர்கள் அரசியல் கைதிகளாக சிறைவைக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

ad

ad