இலங்கையில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படும் பெண்களில் அதிகமானவர்கள் 16 வயதுக்குக் கீழ்ப்பட்ட பாடசாலை மாணவர்கள் என
தெரியவந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் குடிசன மதிப்பீட்டு நிதியம் அறிவித்துள்ளது.
இந்த நாட்டு பெண் பிள்ளைகளில் 6.5 வீதமானவர்கள் 19 வயதை அடைய முன்னர் கர்ப்பம் தரிப்பவர்களாகவும், கற்பைப் பறிகொடுத்தவர்களாகவும் காணப்படுவதாக அந்நிதியம் மேலும் கூறியுள்ளது.
இந்த நிலை அதிகரித்து வருவதாகவும் இதனை தவிர்ப்பதற்கு இலங்கையில் பாலியல் கல்வி தொடர்பில் ஆண், பெண் பிள்ளைகள் அறிவுட்டப்படல் வேண்டும் எனவும் அந்நிதியம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.