புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2015

எலும்புக்கூடுகள் தொடர்பில் இரசாயனப் பகுப்பாய்வு மேற்கொள்ள உத்தரவு

திருகோணமலை கடற்படை முகாமில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பில் இரசாயனப் பகுப்பாய்வு பரிசோதனை மேற்கொள்ளுமாறு கொழும்பு, கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில், ஐ. நா சபையின் காணாமல் போனோர் தொடர்பானஆணைக்குழுவின் பிரதிநிதிகள்  இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். அவர்களின் விஜயத்தின் ஒரு கட்டமாக, திருகோணமலை கடற்படை முகாமிலும் கண்காணிப்பை மேற்கொண்டிருந்தனர்.இதன்போது கண்டுபிடிக்கப்பட்ட, சித்திரவதைக் கூடங்களில் இருந்து மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பொலிஸார், பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்திருந்ததுடன், எலும்புக்கூடுகளையும் தமது பொறுப்பில் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad