புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2015

இசைஞானியாரின் மகத்தான மனிதநேயத்தை பாராட்டாமல் இருக்க முடியுமா?


------------------------------------------------------------------------------
தான் நேசித்த இசையை விட தன் மக்களை எவ்வளவு நேசித்துள்ளார் என்பதை ஐயா இளையராஜாவின் உதவிப்பணி உறுதிப்படுத்தியுள்ளது.

இவரது இந்த செயல் வணக்கத்திற்குரியது. நேற்று முன்தினம்
வெள்ள பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்த்து தன்னால் முடிந்த உதவிகளையும் செய்துள்ளார்.
எந்த ஊடக விளம்பரத்திற்கும் தன்னை முன்னிறுத்த மறுத்து விட்டார்.
குறிப்பாக தமிழ்நாட்டு சகல தமிழ் ஊடகங்களும் தங்களை விளம்பரப்படுத்தி பல கோடிகளை சம்பாதித்து வருகிறார்கள்.
தாங்கள் சிறந்த சமூகசேவை செய்பவர்கள் போல் வேடம் போட்டுக்கொண்டு செய்திகளை பரப்பி வருகிறார்கள்.
இதே நேரத்தில் தங்கள் தொலைக்காட்சியில் இடம் பெறும் தொடர் நாடகங்களை நிறுத்தினார்களா?
விஜய் Tv நடத்தி வரும் பொறுப்பற்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்தும் செய்து வருகிறார்கள். மக்களை முட்டாள்களாகவே ஆக்க முனைகிறார்கள்.
தமிழ் நாட்டு அரசியல் வாதிகளின் கோமாளித்தனமான செயல்கள் மனித நாகரீகத்தை மீறியுள்ளது. மத்தியரசு சுமார் இரண்டாயிரம் கோடிகளை ஒதுக்கியுள்ளது பாதிக்கப்பட்ட மக்களுக்கு.

தமிழ் நடிகர்களின் நிஜ நடிப்பை பார்த்தால் மிகவும் வெறுப்பாக உள்ளது. பிற மாநிலத்தை நேர்ந்தவர்கள் இருபது கோடி, பதினைந்து கோடிகளை வெள்ள திவாரண உதவியாக வழங்கியுள்ளார்கள். அவர்களை தலை வணங்குகிறேன்.
என்னை தாலாட்டி வளர்த்தது தமிழ்நாட்டு மண்ணப்பா என்று எவனோ பாட, எவனோ இசையமைக்க, எவனோ ஒருவன் எழுத அதற்கு கையையும், தலையையும்
அசைத்து ஒரு படத்திற்கு முப்பது கோடிகளை சம்பளமாக பெற்ற ரஜனி என்றகிற நடிகர் இந்த மக்களுக்காக வெறும் பத்து லட்சத்தை வழங்கியிருக்கிறார்.
இனியாவது இந்த தமிழ் ரசிகர்கள்
சிந்திப்பார்களா?
இவர்களிடைய பெயருக்கு பின்னால் தங்களின் தகுதிக்கு சம்பந்தமில்லாத பட்டங்களை சுமந்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.
சூப்பர் ஸ்டார் -ரஜனி
சுப்ரீம் ஸ்டார் - சரத்குமார்
அல்டிமேட் ஸ்டார் -அஜித்
இளைய தளபதி- விஜய்
புரட்சிதளபதி - விசால்
புரட்சி கலைஞர்- விஜயகாந்
உலகநாயகன்- கமல்
இப்படி பல போலியான பெயர்களை தமக்கு தாமே வைத்து தங்களையும், மக்களையும் ஏமாற்றி ஒரு படத்திற்கான சம்பளமாக இருபது கோடி சம்பளத்தை பெற்று அந்த மக்களின் துன்பத்தில்கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்கிறார்கள்.
A.R. ரகுமான் ஒரு மணி நேர இசைக்கு ஒரு கோடி சம்பளத்தை பெறுகிறார். இந்த புயல் எங்கே போய்விட்டது இன்று. தாங்கள் மென்மையானவர்கள் போல் தம்மை அடுத்தவர்களுக்கு வெளிப்படுத்துவதும், இதனால் தமக்கும் தன் சமூகத்திற்கும் சம்பந்தம்மில்லாதவர் போல் காண்பிப்பதும் வேடிக்கையானது, பைத்தியக்காரத்தனமானது.
இயக்குனர் சங்கர் ஒரு படத்திற்கு இருபது கோடி ரூபா சம்பளத்தை பெற்றுக்கொண்டு பிறமொழி படங்களை திருடி தன் சுய சிந்தனையில் தோன்றியது போல் காட்டி மற்றவர்களை எமாற்றி வருகிறார்.
இதற்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள்.
இந்த வேளையில் எமக்காக 2009இல் போர் உச்சத்தில் இருந்த போது தங்கள் உயிர்களை மாய்த்து எம்மவர்களுக்கு ஆதரவு கொடுத்த தமிழகமக்களை புலம்பெயர் அமைப்புகள் கண்டு கொள்ளாமல் இருப்பது இந்த நேரத்தில் கவலையளிக்கிறது.
எமது தேவைக்காக மட்டும் தமிழகமக்களை தொப்புள்கொடி உறவு என்பது வடிகட்டிய சுயநலம் அல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?
எனவே நாடுகடந்த தமிழீழ அமைப்பும்,தமிழர்பேரவை, தமிழர்புனர்வாழவுக்கழகம் போன்ற புலம் பெயர் அமைப்புகள் மக்களின் செல்வாக்கை பெற்றவர்கள்.இந்த நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
இந்த சமயத்தில் தமிழக எம் உறவுகளுக்கு ஆறுதல் கூட என்னால் சொல்ல முடியாமல் இருப்பதை நினைத்து மிகவும் வருந்துகிறேன், வேதனைப்படுகிறேன்.
திரு. இளையராஜா செய்யும் சமூகபணியை பார்த்து மற்றைய சினிமா நடிகர்கள் உதவி செய்ய முன் வருவார்களாக இருந்தால் அது தான்
சுயநலம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
எங்கு தமக்கு எதிர்காலத்தில் கெட்ட பெயர் வந்து விடுமோ என்ற அச்சத்துடன் தான் உதவி செய்ய முன் வருவார்களே தவிர உண்மையான மனித நேயத்திற்காக அல்ல என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
இந்த பேரழிவுகள் மனித வாழ்வை சீர்குலைவு செய்தாலும் மக்களை சிந்திக்க வைத்துள்ளது, தேசியம், மனிதம் என்பதை மக்களுக்கு உணர்த்தியுள்ளது. சினிமாவும்,
ஆன்மீகத்திலும் மூழ்கியிருந்த மக்களை எதிர்காலத்தில் சரியான அரசியல் முடிவுகளை எடுக்க உணர்த்தியுள்ளது.
தி.மு. க. கும்பலை சேர்ந்த ஸ்டாலின் என்பவர் நமக்கு நாமே என்ற பெயரை வைத்து மக்களை ஏமாற்ற நடைபயணம் மேற்கொண்டுள்ளார். எனவே மக்கள்
மிகவும் விழிப்பாக உள்ளார்கள் என்பது அவருக்கு தெரியவில்லை.
தெற்காசியாவிலேயே பதினாறாவது பணக்கார்வரிசையில் இருக்கும் கருணாநிதியின் குடும்பம் இந்த மக்களுக்கு என்ன செய்
தார்கள் என்பதை உங்கள் அறிவையும,அனுபவத்தையும் பயன் படுத்தி சிந்தித்து பார்க்கவும்.
புலம்பெயர்ந்து வாழும் தமிர்களில் பலர் உண்மையாக தமிழக மக்களின் கண்ணீரை புரிந்து தங்களின் உணர்வை அடுத்தவர்களோடு பகிர்ந்து கொள்ள வாய்பில்லாமல் , பேச முடியாமல் தமக்குள்ளே அழுது கலங்குவதையும் என்னால் புரிந்து கொள்ள முடியும்.
எமக்கான சரியான, தகுதியான தலைமை யில்லாததே இதற்கு காரணம். சிறு சிறு கருத்து முரண்பாடுகளை மறந்து, நமக்கும் அடுத்தவர்களுக்கும் நல்லவர்களாக,வல்லவர்களாக, அறமுள்ளவர்களாக தொடர்ந்தும் இணைந்திருப்போம்.
திரு. இளையராஜாவின் தன்னலமற்ற பணியை வாழ்த்துவோம், வணங்குவோம்.
நன்றி.

ad

ad