கிளிநொச்சியில் இயங்கிவரும் பிரபல தனியார் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 600 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆடைத்தொழிற்சாலை முன்றலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குறித்த ஆடைத்தொழிற்சாலை உயர் அதிகாரி ஒருவரை இடமாற்ற வேண்டாம் என தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது என தெரிய வருகிறது.
குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு இன்னமும் முடிவு எட்டப்படாத நிலையில் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டுள்ளது.