காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றிய, கந்தளாயைச் சேர்ந்த பியந்த (வயது–25) என்ற கடற்படைச் சிப்பாயைக் காணவில்லை என்று காங்கேசன்துறை பொலிஸில் கடற்படையினர் முறைப்பாடு செய்துள்ளனர். காங்கேசன்துறை கடற்படை முகாமில் மூன்று நாள்களுக்கு முன்னர் பியந்த கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். நேற்றுக் காலை 10 மணியளவில் கடற்படையினரின் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆயுதங்கள் எதனையும் இதன்போது எடுத்துச் செல்லவில்லை.
காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றிய, கந்தளாயைச் சேர்ந்த பியந்த (வயது–25) என்ற கடற்படைச் சிப்பாயைக் காணவில்லை என்று காங்கேசன்துறை பொலிஸில் கடற்படையினர் முறைப்பாடு செய்துள்ளனர். காங்கேசன்துறை கடற்படை முகாமில் மூன்று நாள்களுக்கு முன்னர் பியந்த கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். நேற்றுக் காலை 10 மணியளவில் கடற்படையினரின் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆயுதங்கள் எதனையும் இதன்போது எடுத்துச் செல்லவில்லை.
நீண்டநேரமாகியும் அவரைக் காணவில்லை என்பதால் கடற்படையினர் தேடுதல் நடத்தியுள்ளனர். அவர் எடுத்துச் சென்ற மோட்டார் சைக்கிள் தையிட்டிப் பகுதியில் வீதி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் காங்கேசன்துறைப் பொலிஸில் கடற்படையினர் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள்ம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.