புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 செப்., 2019

ஒருமித்த நாட்டுக்குள் அதிஉச்ச அதிகாரப்பகிர்வு

ஒருமித்த நாட்டுக்குள் அதிஉச்ச அதிகாரப்பகிர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச, தெரிவித்துள்ளார்.
ஒருமித்த நாட்டுக்குள் அதிஉச்ச அதிகாரப்பகிர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச, தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

அதிகாரப்பகிர்வு விடயம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தான் முன்வைக்கும் அனைத்து யோசனைகளும் தன்னுடைய யோசனைகளே என்றும் அவர் குறிப்பிட்டார்.

தனது அரசியல் வரலாற்றில் ஒருபோதும், நிபந்தனை அரசியலில் ஈடுபட்டதில்லை என்றும் குறிப்பிட்ட அமைச்சர் சஜித் பிரேமதாச, நிபந்தனைகளை முன்வைப்பதும் ஏற்றுக்கொள்வதும் இல்லை என்றார்.

புதிய நாடொன்றை கட்டியெழுப்பும் எமது பயணத்தில் இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பேதங்கள் பாராது ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். மனிதத்துவத்துக்கு முதலிடம் கொடுக்கும் யுகமொன்றை உருவாக்க தான் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ad

ad