புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 நவ., 2020

நீதிமன்ற அனுமதியுடன் முதியவரின் உடல் தோண்டியெடுப்பு

www.pungudutivuswiss.com
யாழ்–சுண்ணாகம் உடுவில் மல்வம் பகுதியில் பகுதியில் யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்ட முதியவரின் உடல் இன்று தோண்டியெடுக்கப்படவுள்ளது.

உறவினர்களிற்கிடையில் ஏற்பட்ட சொத்து பிரச்சனையால் முதியவரின் உடல் புதைக்கப்பட்ட தகவல் அம்பலமானது.

மல்வம் பகுதில் சுமார் ஒன்றரை மாதங்களின் முன்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் முதியவரின் உடல் மல்வம் மயானத்தில் புதைக்கப்பட்டுள்ளது.

அவரது இறப்பு பற்றி யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. இந்தநிலையில் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த முதியவரின் சொத்துக்களை பகிரும் போது உறவினர்களிற்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து தகவல் வெளியாகியதை அடுத்து,பொலிசார் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இதனையடுத்து நீதிமன்ற அனுமதியுடன் சடலம் இன்று தோண்டியெடுக்கப்படவுள்ளது

ad

ad