புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2020

உரும்பிராய் இளம் பெண் தற்கொலை: அதிகரிக்கும் ஈழத் தமிழர்கள் தற்கொலைகள்..

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் இளம் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று உரும்பிராய் கிழக்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் உ.கம்சனா (வயது 20) என்ற இளம் பெண்ணே இவ்வாறு வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தற்போது சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 18 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் மருந்தாளாகக் கடமையாற்றும் இளம் பெண்ணும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.தாமரா பரம்சோதிநாதர் என்ற 29 வயது இளம் பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இள வயதினர்கள் மத்தியில் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

ad

ad