”ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் செயற்படும் இப் புதிய கூட்டணியுடன் ஜனாதிபதி ரணில் மற்றும் ஐ.தே.க இணைய முடியும். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் செயற்படும் இந்தக் கூட்டணியுடன் ஐ.தே.க ஒரு சிறுபான்மை கட்சியாக இணையலாம்”, என ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். அடிப்படை வாக்குத்தளம் இல்லாததால் ஐ.தே.க ஒரு சிறுபான்மைக் கட்சியாகும். இந்தக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவே போட்டியிடுவார். அவரை எதிர்க்கட்சியின் பொது வேட்பாளர் என அழைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். |