புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2023

துருக்கியில் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து: பலர் படுகாயம்

துருக்கியில் இடம்பெற்ற பேருந்து விபத்தொன்றில் இலங்கையர்கள் பலர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தினது நேற்றைய தினம்(10.08.2023) துருக்கி - இஸ்தான்புல் நகரில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் விபத்தின் போது இலங்கையர் ஒருவரின் சுவாசக்குழாய் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

35 இலங்கையர்கள்

துருக்கியில் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து: பலர் படுகாயம் | Istanbul Bus Accident Sri Lanka Workers

இஸ்தான்புல்லில் விமான நிலையத்தை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று 50 அடி பள்ளத்தினுள் விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

துருக்கியில் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து: பலர் படுகாயம் | Istanbul Bus Accident Sri Lanka Workers

மேலும், குறித்த விபத்தின் பொது பேருந்துக்குள் 35 இலங்கையர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து சம்பவம் துருக்கி நேரப்படி நேற்று மாலை 06.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

ad

ad