புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2023

புங்குடுதீவில் கொடிகட்டிப்பறக்கும் கள்ளமாடு, வளர்ப்பு ஆடுகளை வெட்டுவதை தொழிலாக கொண்ட பலர் ,அரசியல்வாதிகள் ,சமூகநலவாதிகள் ,பொதுமக்கள் கண்டும் காணாதது போல வாழ்கின்ற கொடுமை

 _தீவகன் 
சில அவருடங்களுக்கு முன்னர் கள்ளமாடு வெட்டுவது  பற்றி 
பேசுபொருளாகி செய்தியாகி ஒழிப்பது பிடிப்பது என்று
 ஓடித்திருந்தார்கள் .சிறிது ஓய்வுக்கு பின்னர் கடந்த பல வருடங்களாக  உரிமைகோராததாங்களாகவே  மேய்ந்து கன்று  ஈன்று பெரிதாகி செல்லுகின்ற கால்நடைகளை அவை கூடுதலாக  வாழ்கின்ற பகுதிகளில் பல  குழுக்களாக வலையமைப்பாக நிரந்தர  வருமானத்துக்காக   பலர்  இறைச்சிக்காக வெட்டி வருவது பகிரங்க  தொழிலாகி உள்ளது   மாடுகளை . இவ்வகை மாடுகள் வாழ்கின்ற வல்லன் மடத்துவெளி ஊரதீவு கேரதீவு இறுப்பிட்டி பகுதிகளில் குடும்பம் குடும்பமாக இதனை தொழிலாக படைப்பாக்களிலேயே செய்து வருகின்றனர் . பொதுமக்கள் கண்டும் இவர்களின் வன்முறைக்கு அஞ்சி பேச்சின்றி இருக்கின்றனர் .பகல்வேளையிலேயே மொட்ட்ற சைக்கிள்களில் ஓடி திறந்து மாடுகளை  பிடித்து அந்த அந்த பற்றை  மறைவுகளில் கடி போட்டுவிட்டு இரவானதும்  அவற்றை இறைச்சி ஆக்கி தோணிகளில் சுருவில் வேலணை  பகுதிகளூடாக எடுத்தது சென்றும் சிலவேளைகைளில் பேருந்துகளில் சிறு பொதிகளாக   கொண்டு சென்று யாழ்ப்பாண  முஸ்லீம்  கடைகளில் விற்று பெரும் செல்வந்தர்களாக  திகழ்கிறார்கள் .ஊரைதீவின் கடற்கரைகளில் மீன்பிடிப்பது போல  வேஷமிட்டு படடபகலிலேயே இந்த சமூக  விரோத செயல்களில் குடும்பமாக  கூட இயங்குகிறார்கள் அருகிலேயே 3  கடற்படை  துணிச்சலாக இவற்றை செய்கின்றனர் .அத்தோடு பலரது வளர்ப்பு வெள்ளாடுகளை படடபகலிலேயே தூக்கி செல்வதும் வாடிக்கையாகியுள்ளது இந்த ஊரதீவு குழுவுக்கு வல்லன்  சமூக விரோதக்குழு ஒன்றும்  துணிச்சலாக  செயல்படுகிறது .அண்மையில் ஈர்த்து போன்று கட்டி கிடந்த மாடுகளை பலகாலமாக  கஷ்ட்டப்பட்டு ஆடு மேய்க்கும் தொழிலை கொண்ட ஒருவர்  அவிழ்த்து விடத்தை அறிந்தவர்கள்கடடாக்காளி மாடென்று  நினைத்து என பகிரங்கமாக  பதிலளித்துள்ளார் அதாவதஹு  அவருடைய சொந்த ஆடுகளை இரவோடிரவாக  தூக்கி  போயுள்ளார்கள் . ஒருவர்த்தஹு வளர்ப்பு மாடடை கட்டி போட்டுள்ளதை கண்டு இவர்களின் குடும்ப பெண்நடம் கேட்ட்டபோது ஐயோ அது உங்கள் மாடா .தெரியாமல் செய்துவிட் டார்கள் .அதாவது உரிமை கோராத குறி சுடாத மாடுகள் எல்லாம்  தங்கள் பிடித்து விடட அனுமதி இருப்பது போல  பதில் கூறினார்கள் .இது சம்பந்தமாக 5 ஆம் 7 ஆம் வடடார கிராமசேவகர்களுக்கு  பொதுமக்கள் பாதிக்கப்பட்டவர்கள் அறிவித்த பொது  வெட்டும் பொது பி டிக்கும்போது நேரிடையாக கண்டால்  தொலைபெரும்படி கூறினார்கள். ஆனால்  யாரும் அப்படி  தொலைபேசினால் பதிலளிக்க மாடடார்கள் . அத்தோடு அவர்கள் வெளியூர்களில் இருந்து அவ்வப்போது  வந்து செல்வதால் அவர்களால்  இந்த விஷயத்தில் உதவவோ கடடபடுத்தவோ முடியாத நிலை உள்ளது .பல  பெயரெடுக்கும் அரசியல்வாதிகள் சமூக நலன் விரும்பிகள்  இருந்தும் அவர்கள் கூட இந்த விஷயத்தில் அக்கறை காட்டுவதே இல்லை சில சமூ கநலன்விரும்பிகள் இவற்றுக்கு உடந்தையாகவும் கண்டும் காணாமலும் வாழ்கின்றன்றனர் .பல  நேரங்களில் பல  சந்தர்ப்பங்களில் இவர்களில் வாள்  வெட்டு நிகழ்வுகளை நிகழ்த்த்தி பயமுறுத்தி  இருக்கிறார்கள்  என தெ ரிகிறதுஒரு இந்தவகை  பிரபலமான சமூக விரோதி ஒருவரின் க்ஸ்க்குடும்பமே  பிரபலமான ஒரு  சமூக நலவாதியின் வளவுக்குள் அவரது  வீட்டிலேயே வசித்து வருகிறது கேவலமானது கண்கூடு  தயவு செய்து அரசியல்வாதிகள் சமூக நலவாதிகள்  முக்கியமாக கிராமசேவகர்கள் இந்த விடயத்தில் உடனடி கூடுதல் அக்கறை காட்டி நடவடிக்கை  எடுக்க  வேண்டுகின்றோம் இல்லையேல்  நீங்களும் இவர்களுக்கு எதோ ஒரு வகையில்  உடந்தையாக உதவியாக  இருப்பது  நிஜமாகும் இந்த செய்தியையை முடிந்தவரை எமது  ஊர் மக்கள்  பகிர்ந்து கொள்ளவும் 

ad

ad