புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2023

வத்திராயனில் சிக்கிய பாரிய கசிப்பு உற்பத்தி மையம்! - கட்சிப் பிரமுகர் கைது. [Saturday 2023-09-09 17:00]

www.pungudutivuswiss.com


வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் சுமார் 600 லிட்டர் கோடா, கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்ற பொருட்கள் என்பன மருதங்கேணி பொலிஸாரால் நேற்று கைப்பற்றப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் சுமார் 600 லிட்டர் கோடா, கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்ற பொருட்கள் என்பன மருதங்கேணி பொலிஸாரால் நேற்று கைப்பற்றப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்

வத்திராயன் கிராமத்தில் கசிப்பு உற்பத்தி தொழிலகம் ஒன்று இயங்கிவருவதாக மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்றிரவு குறித்த உற்பத்தி நிலையம் மருதங்கேணி பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.

இதன்போது நான்கு கொள்கலன்களில் 600 லீட்டருக்கு மேற்பட்ட கோடா மற்றும் கசிப்பு, கசிப்பு வடிப்பதற்கு தேவையான பொருட்கள் என்பனவற்றை கைப்பற்றியதுடன், சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக மருதங்கேணி பொலிஸ் நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்ட நபர் கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ad

ad