வத்திராயன் கிராமத்தில் கசிப்பு உற்பத்தி தொழிலகம் ஒன்று இயங்கிவருவதாக மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்றிரவு குறித்த உற்பத்தி நிலையம் மருதங்கேணி பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது நான்கு கொள்கலன்களில் 600 லீட்டருக்கு மேற்பட்ட கோடா மற்றும் கசிப்பு, கசிப்பு வடிப்பதற்கு தேவையான பொருட்கள் என்பனவற்றை கைப்பற்றியதுடன், சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக மருதங்கேணி பொலிஸ் நிலையம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் கைது செய்யப்பட்ட நபர் கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. |