அவர்கள் எதிர்பார்த்ததுபோலவே வலதுசாரிக் கட்சிகளை மூன்றாவது இடத்துக்கு தள்ளியும் விட்டார்கள். ஆனால், அவர்கள் வென்றது 188 இருக்கைகளைத்தான். ஒரு கட்சி பெரும்பான்மை பெறவேண்டுமானால், அது 289 இருக்கைகளைக் கைப்பற்றவேண்டும். வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஜூன் மாதம் 7ஆம் திகதி, இன்னும் சில நாட்களில் அரசு அமைக்க இருப்பதாகவும், பிரதமர் யார் என்பதை அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்தார் Socialist கட்சியின் தலைவரான Olivier Faure. ஆனால் இன்று 15ஆம் திகதி ஆகியும், யாரும் ஆட்சி அமைக்கவும் இல்லை, பிரதமர் யார் என அறிவிக்கவும் இல்லை. இதற்கிடையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தங்களை குடியரசுவாதக் கட்சிகள் என கருதும் கட்சிகள் அனைத்தும் இணைந்து, தீவிரக் கொள்கைகள் கொண்ட கட்சிகளை ஓரங்கட்டும் வகையில், புதிய கூட்டணி ஒன்றை அமைக்க முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மொத்தத்தில், பிரான்சில் தேர்தல் முடிந்தும், அரசு அமைப்பதில் இன்னமும் இழுபறியே நீடிக்கிறது. |