வேலணைத் தீவகத்தில் அமைந்துள்ள சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஈழப் போரில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி உயிர் நீத்த மாவீரர்களுக்கு பொது மக்களும் அவர்களின் உறவினர்களும் மலர் தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அத்துடன் மாவீரர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தி, வீர மரணம் கண்ட மாவீரர்களை கண்ணீரோடு மக்கள் அஞ்சலித்து வருகின்றனர்.
கொட்டும் மழைக்கு மத்தியிலும் மாவீரர்களை நினைவு கூர
கிளிநொச்சி துயிலுமில்லம் நினைவேந்தல் நிகர்வுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
ஈழப் போரில் மக்களுக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், மக்களுக்குமாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்படி, சற்று முன்னர் தனித் தாயகம் கோரிய விடுதலைப் போராட்டத்தில் தன்னுயிர் கொடுத்த வீர மறவர்களை நினைவேந்தி பிரதான சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.