கடந்த சில ஆண்டுகளாக ஈக்வடோர் நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் அதிகரித்ததுடன் கொடூரமான கொலைச் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான சூழ்நிலையிலேயே குறித்த கடற்கரைப் பகுதியில் 5 மனிதத் தலைகள் கயிற்றில் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளன. அதைக் கண்ட அங்கிருந்த மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்க, பொலிஸ் சம்பவ இடத்துக்குச் சென்று கொலை தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அந்த மனிதத் தலைகள் காணப்படும் இடத்தில் இரத்த அடையாளங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு போதைப்பொருள் கும்பல்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்தக் கொலைகள் இடம்பெற்றிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். |