-
27 பிப்., 2013
காலத்தின் தேவை கருதி கஜனின் முயற்சி ஜெனிவா முன்றலில் நெகிழ வைத்த கண் காட்சி 2ஆம் நாள்
ஜெனிவா முன்றலில் கடும் குளிருக்கு மத்தியிலும், இன்று இரண்டாவது நாளாக கஜன் அவர்கள் ஈகைப் பேரொளி முருகதாசனின் படத்திற்கு விளக்கேற்றி மரியாதை செலுத்தியபின், இனப்படுகொலைக் காட்சிகளை பல்லின மக்களின் பார்வைக்கு வைத்திருந்தார்.இன்றும் பல்லின மக்களின்
அதிரும் பிரித்தானியப் பாராளுமன்றம்
பிரித்தானியாவில் இன்று காலை 10.00 மணிக்கு உலகத் தமிழர் பேரவையின்(GTF) 3வது கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. நடைபெறும் இக் கூட்டத்திற்கு பிரித்தானிய உதவிப் பிரதம மந்திரி கலந்துகொள்வது , பிரித்தானியத் தமிழர்களை பெருமிதமடையச் செய்துள்ளது. இலங்கை அரசாங்கமானது இக் கூட்டத்தை எப்படியாவது தடைசெய்யவேண்டும் எனக் கோரியதும் அறியப்பட்ட விடையம் ஆகும். குறிப்பாக பிரித்தானியாவில் நடைபெறும், மகாராணியின் கூட்டம், பாராளுமன்ற அமர்வுகளுக்கே 3 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வது வழக்கம். ஆனால் பிரித்தானிய வரலாற்றிலேயே இது தான் முதல் தடவையாக, 3 கட்சிகளின் உயர்மட்ட தலைவர்கள் தமிழர்களின் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள்.
இலங்கை வேண்டுமா? தமிழகத் தமிழர்கள் வேண்டுமா?: மாநிலங்களவையில் திருச்சி சிவா ஆவேசம்!
போர்க்குற்ற நாடான இலங்கையுடன் நட்புறவு வேண்டுமா? தென்னிந்திய சகோதரர்களுடன் நட்புறவு வேண்டுமா? என்பதை மத்திய அரசு தான் தீர்மானிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. திருச்சி சிவாவின் பேச்சு டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானம்! மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவு செய்யப்படும்!- சல்மான் குர்ஷித்
இந்தியா பெரியண்ணன் மனப்பான்மையுடன் செயல்படவில்லை! பாராளுமன்றத்தில் சல்மான் குர்ஷித் பேச்சு!
இலங்கையில் சீனாவின் நடவடிக்கை காரணமாகவே இப்பிரச்சினையில் அமெரிக்கா தலையிடுகிறது என்றும், போரின் கடைசி கட்டத்தில் ராணுவம் அட்டூழியம் செய்ததில் மாற்று கருத்து இல்லை என்றும்
இலங்கையில் போர் முடிந்து வருடங்கள் பல கடந்துவிட்டன. ஆனால், இந்தியாவின் துணையோடு தமிழீழத்தில் ராஜபக்சே நடத்திய பச்சைப் படு கொலைகளுக்கு புதிது புதிதாக நிறைய ஆதாரங்கள் வெளிவந்தும் நீதி மட்டும் இன்னும் கிடைத்தபாடில்லை.
இந்த நிலையில் பிரபாகரனின் 13 வயதே ஆன இளைய மகன் பாலச்சந்தி ரன் உயிருடனும் பிறகு கொல்லப் பட்டதுமான புகைப்படங்கள் சர்வதேச அள வில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
58 வயதாகும் தேசியத் தலைவர் பிரபாகரன்-மதிவதனிக்கு 29 வயது சார்லஸ்ஆண்டனி, 28 வயது துவாரகா, 13 வயது பாலச்சந்திரன் என 3 குழந் தைகள். சார்லஸும் துவாரகாவும் பிறந்து 10 வருடங்கள் கழித்து 1996-ல் பிறந்தவர் பாலச்சந்திரன். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஒரு போராளியாக இருந்தவர் பிரபாகரனின் மைத்துனர் (மதிவதனியின் தம்பி) பாலச்சந்திரன். இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலைகொண்டு புலிகளுக்கு எதிராக தாக்குதலை நடத்தியபோது இந்திய ராணுவத்தின் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார் பாலச்சந்திரன். ஒரு போராளியாக இருந்து வீரமரணத்தைத் தழுவிய தனது மைத்துனரின் பெய ரைத்தான் தனது இளைய மகனுக்குச் சூட்டினார் பிரபாகரன். நீண்ட வரு டங்கள் கழித்து பிறந்த மகன் என்பதால் பிரபாகரன் - மதிவதனிக்கு மட்டுமல்ல இயக்கத்தின் தளபதிகள் அனைவ ருக்குமே பாலச்சந்திரன் செல்லம் தான்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)