புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூன், 2014


அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்கள் பற்றிய அறிக்கையை கோரும் ஐ.நா
அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் ஏற்பட்ட வன்முறையான நிலைமை சம்பந்தமாக தனக்கு அறிக்கை ஒன்றை பெற்றுதருமாறு ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரம் தொடர்பான உதவி செயலாளர் ஒஸ்கா, பெர்னேன்டஸ் ட்ரென்கோ அரசாங்கத்திடம் கேட்டுள்ளார்.
கடந்த 19 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு வந்திருந்த அவர், மேற்படி சம்பவங்கள் தொடர்பாக சரியான அறிக்கையை தயார் செய்து அதனை தக்கு வழங்குமாறு அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ளார்.
ஐ.நாவின் அரசியல் விவகார உதவி செயலாளர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப் பகுதியில் இலங்கையின் தற்போதை அரசியல் நிலைமைகள், சமூக, பொருளாதார நிலைமைகள் குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதனை தவிர எதிர்க்கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் சிலரையும் அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்

ad

ad