புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 அக்., 2019

ஐந்த தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டதன் பின்னணியில் இந்தியாகஜேந்திரகுமார்



ஐந்த தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டதன் பின்னணியில் இந்தியாவே உள்ளதெனவும், அவற்றின் கோரிக்கையின் ஊடாக கோத்தாபய ராஜபக்சவுக்கு இந்தியா அறிவிப்பொன்றை விடுத்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
ஐந்த தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டதன் பின்னணியில் இந்தியாவே உள்ளதெனவும், அவற்றின் கோரிக்கையின் ஊடாக கோத்தாபய ராஜபக்சவுக்கு இந்தியா அறிவிப்பொன்றை விடுத்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றுநடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை கொண்டு சென்றால்தான் தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்கும் என்ற கோட்பாட்டையே கூட்டமைப்பினர் நிராகரித்துள்ளனர். கூட்டமைப்பு மட்டுமல்ல, கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தங்களை கொள்கைவாதிகளாக காண்பித்த விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்றவையும் தேசம், இறைமையை நிராகரித்தார்கள்.

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு திட்டம் வரும் நிலையில், விக்னேஸ்வரன் இவற்றை கைவிட்டு மாகாணசபையில் ஒரு தீர்வு யோசனைகளை தயாரித்து, அரசாங்கத்தின் அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பித்தார்.

இவ்வாறு தமிழர்களின் அடிப்படை கோட்பாடுகளை நிராகரித்து வந்த தரப்புக்கள், திடீரென எமது கோட்பாடுகளை கைவிடக் கூடாதென கூறி நாங்கள் சொல்லி வந்த கோட்பாடுகளை கொள்கையளவில் ஏற்று, ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

மேலும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட 5 கட்சிகளும் இந்தியாவின் அனுமதியை பெறாமல் எதனையும் செய்யமாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள், இந்தியா தடைசெய்திருந்த கோட்பாடுகளை எப்படி ஒன்றிணைந்து கையொப்பமிட்டார்கள் என்பது தான் தற்போது அனைவரது கேள்வியாகவுள்ளது.

தேர்தலிற்காக அந்த அறிக்கையில் கையொப்பமிட்டார்கள் என்பது ஒருபுறமிருக்க இதற்கு வேறொரு காரணமும் இருக்க வேண்டும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையாக இந்த 5 கட்சிகளும் இந்தியா கொடுத்த ஆலோசனையின் படிதான் ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளன. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வெறுமனே சஜித்- கோத்தாவிற்கிடையிலான தேர்தல் அல்ல.

இது கட்சிகளுக்கிடையிலான போட்டி தேர்தலும் அல்ல. வல்லரசுக்களிற்கிடையிலான போட்டியாகும். கோத்தாவின் பின்னால் சீனாவும் அதன் சார்பு நாடுகளும் உள்ளன. அதேபோன்று சஜித்தின் பின்னால் இந்தியாவும் மேற்கு நாடுகளும் உள்ளன.

இந்த ஆவணத்தில் கையெழுத்து வைத்த ஐந்து கட்சிகளும் இந்தியாவின் முகவர்கள் என்பது உங்களிற்கு தெரியும். இந்த அறிக்கையின் ஊடாக கோத்தாவிற்கு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர்.

நீங்கள் இந்தியா, மேற்கு நாடுகளின் நலன்களை மீறி செயற்பட்டால், இதுவரை தமிழ் தேசிய அரசியலை தமிழ் மக்களிடமிருந்து இல்லாமல் செய்ய செயற்பட்ட நாங்கள், மீண்டும் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் கோரிக்கைகளை வலியுறுத்துவது மட்டுமல்ல அதை ஆதரிக்கவும் தயாராக இருக்கிறோம் என்பதை அந்த ஐந்து முகவர் அமைப்பின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளனர்.

அதேநேரம் இன்னொரு செய்தியை கோத்தாவிற்கும், அவர் சார்ந்தவர்களிற்கும் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டு கூட்டில் ஒற்றையாட்சிக்குரிய இடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேண்டுமென நாம் வாதாடினோம். அந்த கோட்பாடுகளை உண்மையில் ஏற்றுக்கொள்வதென்றால், இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதில் எந்த சங்கடமும் இருக்க முடியாது என இரண்டாவது செய்தியை கோத்தாவிற்கு தெரிவித்துள்ளனர்.

சீனாவை கைவிட்டு இந்திய மேற்குலக வட்டத்திற்குள் நீங்கள் இருப்பீர்கள் என்றால் தமிழ் அரசியலை நாம் ஒற்றையாட்சிக்குள் முடக்கவும் தயாராக இருக்கிறோம் என்ற செய்தியை கோத்தாபயவிற்கு குறித்த ஐந்து அம்ச கோரிக்கைகள் ஊடாக அறிவித்துள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.

ad

ad