புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஆக., 2012


நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மீளமைத்துள்ள அமைச்சரவையின் விபரங்கள்!
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மேற்சபைக்கான நியமனங்களை அறிவித்திருந்த நிலையில் தற்போது மீளமைக்கப்பட்டுள்ள தனது அமைச்சரவை பற்றிய விபரங்களை இன்று வெளியிட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வளர்ச்சி மற்றும் அமைச்சரவையின் செயற்திறன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட உள்ளார்ந்த மதிப்பீட்டின் அடிப்படையில் தனது அமைச்சரவை மீளமைத்துள்ளதாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இவ்விடயம் குறித்து தெரிவித்துள்ளார்.
15 அமைச்சர்களை கொண்டதாக விரிவாக்கம் பெற்றுள்ள அமைச்சரவை மீளமைப்பு குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனையினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக செய்தியில்,
பொதுவாக உலகில் உள்ள அரசாங்கங்கள் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப தமது அமைச்சரவையினை புதுப்பித்துக் கொள்வதென்பது வழமையில் காணப்படும் ஒரு நடைமுறையாகவுள்ளது. இந்நடைமுறைக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விதிவிலக்கானதல்ல.
அந்தவகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்திறனை மேலும் செழிப்படைய வைக்கும் நோக்கில் அமைச்சரவை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இம்மாற்றங்கள் அமைச்சரவையின் தொடர்ச்சியை உறுதிபடுத்தவும் அதே வேளையில் பல புதிய உறுப்பினர்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளவும் வாய்ப்பளித்தமை மகிழ்ச்சிக்குரியதே.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினது இலக்கினை அடைவதற்கு மீளக் கட்டமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை அர்ப்பணிப்புடன் செயற்படும் என்பதை உறுதியாகத் தெரிவிக்க விரும்புகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் விபரங்கள்:
துணைப் பிரதமர்கள்:
திரு உருத்திராபதி சேகர் - மாவீரர்கள், போராளிகள் குடும்ப நலன் பேணல்
பேராசிரியர் செல்வா செல்வநாதன் -  நிதித்துறை
திருமதி சுபா சுந்தரலிங்கம் - துறைசாரா அமைச்சர் - பிரதமர் பணியகத் தலைவி
அமைச்சுக்களின் விபரங்கள் :
திரு டிலக்சன் மொறிஸ் - இனஒழிப்பு, போர்க்குற்றங்கள் மானிடத்துக்கெதிரான குற்றவிசாரணை-தடுப்பு
திருமதி பாலாம்பிகை முருகதாஸ் - பெண்கள், சிறுவர், மூத்தோர் நலன் பேணல்
கலாநிதி தவேந்திர ராஜா - கல்வி, உடல்நலத்துறை
திரு முத்துக்குமாரசுவாமி இரத்னா - ஏதிலிகள் விவகாரம்
திரு சாம் சங்கரசிவம் - வெளியீடுகள் ஆவணக் காப்பகத்துறை
திருமதி ரஜனி சின்னத்தம்பி - தமிழ் கலைகள் தொன்மை பேணல்
திரு மகிந்தன் சிவசுப்பிரமணியம் - அரசியல் கைதிகள, போர்க்கைதிகள், இடம்பெயர்ந்தோர் விவகாரம்
திரு சிவகுருநாதன் சுதர்சன்  -   ஊடக விவகாரம்
செல்வி வாசுகி தங்கராஜா -  அனைத்துலக விவகாரம்
திரு தணிகாசலம் தயாபரன் - அரசியல் விவகாரம்
திரு நிமால் விநாயகமூர்த்தி - பொருண்மிய அபிவிருத்தி,  சூழல்துறை
மீளமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் புதிய உறுப்பினர்கள் பலர் இணைக்கப்பட்டும்  ஏற்கனவே இருந்த சில அமைச்சுக்களைப் பிரித்தும், வேறு சிலவற்றின் பொறுப்புக்கள் மாற்றப்பட்டும் உள்ளது.
விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

ad

ad